Thursday 21 March 2013

mahabharadham AMBAI character

சன் T.V.யில் மகாபாரதம் தொடர் ஒளிபரப்பப் படுகிறது.அம்பை என்ற ஒரு பெண் பாத்திரம்.நீதிகளையும்,அநீதிகளையும் எடுத்துரைக்கும் இதிகாசம்தான் பாரதம்.அந்தக் கால கட்டத்திலேயே பெண்ணுரிமை இப்பாத்திரத்தின் வாயிலாக பேசப்பட்டிருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.இப்பெயரை நான் கேள்விப் பட்டிருக்கிறேன்.ஆனால் இதன் தன்மையை,பார்க்கும் வாய்ப்பு தொடரில் கிடைத்துள்ளது.தான் விரும்பும் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள இயலாத சூழல்;அதனை எதிர்த்துப் போராடும் துணிவு;அப்படிப்பட்ட ஒரு கால,இட,வாழ்க்கை நிலையிலும் என்ன மாதிரியான மனநிலை!பாரதியார் கூட, தன், பாஞ்சாலி சபதத்தில்,இதிகாசத்திற்குப்,பிற்பட்ட காலப் போக்கில் தான்,திரௌபதியை,கணவனுக்கு எதிர்ப்பைக் காட்டும் பெண்ணாகப் படைத்திருப்பார்.ஆனால் இந்தப் பாத்திரம் முன் காலத்திலேயே முற்போக்குப் பெண்ணா என்று வியக்க வைக்கிறது.அரச குடும்பமாக இருந்தாலும்,சுய விருப்புடன் நடக்கும் [நியாயமான]பெண்ணை பெற்றவர்களும்,மற்றவர்களும் வெறுத்து ஒதுக்கும்,அந்தக் கால முறையை அறிகிறோம்.கொஞ்சம்,கொஞ்சமாக,பெண்கள் முன்னேற்றம் என்பது எத்தனைப் போராட்டங்களை எதிர் கொண்டதோ?பெற்றோர்களே கூட தங்கள் பெண்களுக்கே உரிமை வழங்க என்னென்ன அனுபவங்களை மேற்கொண்டிருப் பார்கள்?எத்தனை தலைமுறைகள் தாண்டி இருக்கும்!பெண்ணுரிமைக்கு வித்திட்டவன் பாரதி என்று நினைத்துப் பெருமிதப்பட்டுக்கொள்ளும் நிலையை மிஞ்சும் அளவுக்கு,எந்த அடித் தளமும்,துணையும் இல்லாமல் மகாபாரதக் கால 'அம்பை 'ஒரு உயர்ந்த பாத்திரம்தான்!

Friday 15 March 2013

puliyanthoppu

எங்கள் ஊரின் வீட்டுக் கொல்லைப் புறம் பெரிய புளியந்தோப்பு இருந்தது.பெரிய என்றால் ரொம்பவே பெரிய்.......யது.அந்தத் தோப்புக்குள் தான் பெரிய,வரலாற்று சிறப்பு மிக்க,கலைநயம் நிரம்பிய கோவிலும் உண்டு.தோப்புதான் 35வருடத்துக்கு முந்திய பப்ளிக் toilet.இன்றைய கோவில் சுற்றுப் புறத்தைப் பார்த்தால் நம்பமாட்டார்கள்.அத்துடன் அருவருப்பாகவும் உணர்வார்கள்.தொல்பொருள் துறை கட்டுப் பாட்டின் கீழ் வந்த இத்தனைக் காலங்களில் எவ்வளவோ மாற்றங்கள்!ம்...அது இருக்கட்டும்.தோப்பாக இருந்த பொழுது புளியமரங்கள் காய்க்கத் தொடங்கி பழங்கள் உதிர்ப்பு வரையிலும் வருடந்தோறும் குறிப்பிட்ட ஒருவரே குத்தகைக்கு எடுப்பார்.நிறைய கெடுபிடி;ஒரு பழம் கூட தெரியாமல் பொறுக்கி விட முடியாது.நல்ல வெயில் காலம் வேறு.நிழல் தேடி ஒதுங்கவும் முடியாது.[ஜப்பானில் இருக்கும் சொகுசு toilet ஆ?]என் அண்ணன் திருமணத்தின் பின் அண்ணியை காரணமாக்கித் தான் எங்கள் அப்பா toilet கட்டினார்.இப்படியான ஒரு நாளில் என் தம்பி பழம் பொறுக்கினானா அல்லது மரத்தடியில் ஒதுங்கினானா தெரியவில்லை.அந்த குத்தகை ஆள் பேசுவதைக் காது கொடுத்துக் கேட்க முடியாது.அவ்வளவு மோசம்.அவன் மனைவி அதற்கும் மேல்.ஒரு பெரிய கொட்டகை போட்டுக் காவல் இருப்பது,பழம் சேகரிப்பது எல்லாம்.அந்தக் கொட்டகையில் தம்பியைக் கட்டிப் போட்டு விட்டார்.ரொம்ப சின்னப் பையன் வேறா?மிரட்டி வைத்துக் கொண்டிருக் கிறார்.அரை மணி கழித்துத் தான் எங்களுக்கு செய்தியே வருகிறது.பிறகு கெஞ்சிக் கூத்தாடி கூட்டி வந்தோம்.நாங்கள் சிறு வயதிலிருந்தே எப்படியெல்லாம்,எதற்கெல்லாம் போராடி இருக்கிறோம்!வாழ்க்கையை எளிமையாக எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பதற்கு இது ஒரு சான்று.அவ்வளவே.அதே புளியந்தோப்பில் ஆடி மாத ஏகாதசியில் ஊஞ்சல் கட்டி,பெண்கள் விளையாடியும் இருக்கிறோமே!இன்று தோப்பே இல்லை.


Tuesday 5 March 2013

paarvaikalil konangalum konalkalum

                                 
கல்லூரிப் படிப்பில் கண்ணப்ப நாயனார் பற்றிப் படித்திருக்கிறோம்.இன்ன கொள்கைகள்,என்பது தெரியாமலே கடவுளிடம் வெறித்தனமான அன்பு கொண்டவர்.செருப்புக் காலால் இறைவனின் கண்ணை அடையாளம் கொண்டும்,மாமிச உணவினை படைத்தும் சிவனிடம் ஐக்கியமானவர்.சிலர் இது போன்றே குருட்டுத் தனமாக செயல் படுவர்.ஆனால் அது நன்மையில் முடிந்திருக்கும்.சமீபத்தில் என் கணவர் ஒரு மின் அடுப்பு வாங்கினார்.அது எனக்குப் பழக்கமில்லை.அத்துடன் காஸ் cylindor தீர்ந்ததும் அவருடைய முட்டாள் தனத்தினால் தான்.எப்படியும்மின் அடுப்பில் சமையல் செய்ய வேண்டிய கட்டாயத்தின் பேரில் அதனைக் கற்றுக் கொண்டேன்.இன்று அந்த அடுப்பு சமையலுக்கு எளிதாக இருக்கிறது.என் பெண்ணுக்கு ஒன்று வாங்க கணவரிடம் சிபாரிசு செய்கிறேன்.{திட்டுவது தொடர்கிறது.அது வேறு விஷயம்.}ஒரு 12 வருடங்களுக்கு முன் மிகக் குறைந்த விலையில் 2 பிளாட் வாங்கினார்.இருக்கும் கொஞ்ச நகைகளையும் அடகு வைத்து பிடிவாதமாக வாங்கினார்.வீட்டில் இருக்கும் நிலை குறித்த எந்த பயமும்,எப்பொழுதும் அவருக்கு கிடையாது.அந்தக் காட்டில் போய் வாங்குகிறாரே என்று எனக்குத் தான் குழப்பம்.10வருடங்களுக்குப்பிறகு என் பெண்ணுக்குக் கல்விக்கடன் வாங்கும் பொழுதுதான் அதன் அருமை தெரிந்தது.இன்றைய நிலையில் அதனைச் சுற்றிலும் வீடுகள்.கீழ் வீட்டில் இருப்பவர் களிடம் வாடகையைக் கூட்டிக் கேட்டார்.இருக்கிற வாடகையும் போய்விடப் போகிறதே என்று நான் பயந்தது போலவே அவர்கள் வீட்டைக் காலி பண்ணி விட்டார்கள்.என்னைப் பார்த்துப் பேசவே தயங்கிக் கொண்டிருந்த அவருக்கு 10நாட்களில் அவர் கேட்டதை விட 1.5மடங்கு அதிக வாடகைக்கு ஆள் வந்து,நான்தான் வாயடக்கிக் கொள்ள வேண்டி வந்தது.உனக்குப் 10 வருடமாவது teaching post கிடைக்கும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.இருக்கிற வேலைக்கு வேட்டு வராமலிருந்தால் சரி என்று அலட்சியப் படுத்துவேன்.14 வருடங்கள் ஆசிரியப் பணியாற்றினேன்.என் பெண்ணின் பயோ படிப்பு குறித்து தெரிந்தது போல் பேசிக் கொண்டே இருப்பார்.நாங்கள் அவரை ஓட்டுவோம்.ஆனால்,இன்று.......இப்பொழுது என் பையனுக்கான வேலை குறித்து சொல்லிக் கொண்டே இருக்கிறார்.நானும் செண்டிமெண்டாக மனதுக்குள் நினைத்துக் கொள்கிறேன்.ஆனால் அவரைத் திட்டிக் கொண்டுதான் இருக்கிறேன்.[நை ....நை ...என்று விடமாட்டீர்களா!]ஒரு முக்கியமான நிகழ்ச்சியை சொல்லியே ஆக வேண்டும்.என் பையன் U.K.G.படிக்கும் பொழுது பரமக்குடியில் ஒரு திருமணத் திற்கு சென்ற நாங்கள்,ராமேஸ்வரம் சென்று வர எண்ணி busstandl ல்  நின்று கொண்டு இருந்தோம்.பஸ் எங்கே நிற்கும் என்று தெரிந்து வர அவர் சென்றார்.நான் 2பேரையும் ,laggage உடன் சேர்த்துப் பார்த்துக் கொண்டு நின்றேன்.பின்னால்,அருகில் உள்ள பாத்ரூம் க்குச் சென்ற என் பெண்ணுக்கு உதவ சென்ற 2நிமிடங்களுக்குள்,என்னைக் காணாமல்,தேடிக்கொண்டு,என் பையன் எங்கோ ஓடி விட்டான்.வெளியில் வந்து பார்த்த எனக்கு,என்ன செய்வது என்றே தெரியவில்லை.பயம்,laggagejai வைத்துவிட்டு,என் பெண்ணைப் பிடித்துக் கொண்டு பக்கத்தில் உள்ள கடைகளில் தேடுகிறேன்;எங்கும் அவனில்லை.இப்பொழுதும் மனம் பதறுகின்றது என்றால்,அப்பொழுது என் நிலையை நான் எப்படி உணர்த்துவேன்?திடீரென்று,சினிமா கதா நாயகன் போல் வந்தவர் [என் கணவர் தான்]விடுவிடு என busstand க்கு எதிர் புறம் சென்றவர்,மீன்கூடைக் கார அம்மாவிடம் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்று கொண்டு இருக்கிறான்;அழாமல் இருக்கிறான்;மேலும் வேடிக்கை வேறு இவனுக்கு என்று கூட்டிக் கொண்டு வந்தாரே பார்க்கலாம்!அப்பாடா....நல்ல நேரம்.இவ்வாறான பல செயல்பாடுகள் அவருடையன!ஒருவேளை இவருக்கு என்றே சில அமைப்போ?[என்னைக் கல்யாணம் பண்ணிகிட்டதே அவருக்கு ஒரு குருட்டு அதிர்ஷ்டம் தானே!]அவருடைய அணுகுமுறைகள் நம் பார்வையில் கோணல்!ஆனால் அவருடைய கோணம் அப்படித்தானோ என்னவோ?33வருட வாழ்க்கையில் நானே இன்னும் தடுமாறுகிறேன்.இதுபோல்உலகில் என்னென்ன நிகழ்கின்றதோ?எங்கள் ஊரின் நகரப் பகுதியில் ஒருவர்,கடைத் தெருவில் சுற்றிக் கொண்டிருப்பார்.உடலில் ஒரு துணியும் இருக்காது.நான் கொஞ்சம் வளர்ந்து,அறிவு தெரிந்த பருவத்தில்,வீட்டுப் பெரியவர் களிடம் அவரைக் குறித்து,கேலி செய்தால்,என்னைக் கண்டிப்பதுடன்,அவரை உயர்வாகவும் கூறுவார்கள்.பெரிய ஹோட்டல் களில் அவருக்குத் தான் முதலில் உண்ணக் கொடுப்பார்களாம்;பிறகுதான் வியாபாரமே ஆரம்பிப்பார்களாம்.அப்படி செய்தால் வியாபாரம் நன்றாக நடக்கும் என்று நம்பியது ஒருபுறம் இருந்தாலும்,அவ்வாறே நடந்துமிருக் கின்றதே!அவராக எங்கும் போய் கேட்கக் கூட மாட்டாராம்!இன்றும் வட மாநிலங்களில் மூன்றாம் பாலினத் தவரைப் பார்த்து செல்லும் காரியம் வெற்றி அடையும் என்று நம்புவார்களாம்.என் பெண் கூட கல்லூரித் தேர்வுக்கு செல்லும் வழியில் இருக்கும் 3ஆம் பாலின ஒருவரைப் பார்த்தால் வினாத்தாள் எளிமையாக இருக்கும் என்பார்கள் என்று கூறுவாள்.உண்மையா என்ற ஆராய்ச்சி யில் இறங்காமல் அதனதன் இயல்பில் வாழ்ந்து விட வேண்டியது தான்.