Saturday 24 January 2015

மாதொருபாகன் நாவலுக்கான சர்ச்சை ஒரு புறமிருக்கட்டும்.அந்த நாவலில் வரும் குறிப்பிடத் தக்க வரிகள் ஒரு வார இதழில் வந்திருந்தது.நாவல் ஆசிரியர் குறிப்பி ட் டிருப் பது போல் நடந் திருக்குமா ,இவ்வளவு வெளிப் படையாக எழுதப் பட்டிருக் கிறதே என்று வருந்தினேன்.சமீபத்தில் அம்மா வந்தாள் என்ற நாவலை,  வெகு நாட்களாகத் தேடி கிடைத்த மகிழ்வில் படித்தேன்.இப்படி எல்லாமா பெண்கள்,அதுவும் அம்மா இருப்பாளா என்று மனம் வெதும்பினேன் .அதுவும் உயரினத்தை சேர்ந்தவள் வேறு. ஆசிரியர் தான் நேரில் பார்த்த பெண்களின் வாழ்க்கை என்று வேறு எழுதி இருந்தார்.எனக்கு  வெறுப்பாகி விட்டது.மறைந்த சுஜாதா   அவர்கள் ஸ்ரீரங்கத்து தேவதைகள் என்று எழுதினார்.நான் படித்த தில்லை.அது எப்படி இருக்குமோ?  
சமீபத்தில் 2வது முறை ஆதலினால் காதல் செய்வீர் திரைப்படத்தை பார்க்க நேரிட்டது.திருமணத் துக்கு முன் பெண் கருவுருவுவது இரண்டொரு நேரடி சம்பவங்களை கேள்விப் பட்டிருக்கிறேன்.அவர்கள் படிப்பறிவு இல்லாதவர்கள்.பெற்றோர்கள் வீதிக்கு வந்து அசிங்கப் படுத்தாமல்,அசிங்கப்படாமல் உரியவர்களுக்கே திருமணம் செய்த துண்டு.அவர்கள் இனத்தில் வேறு பட்டவர்கள் இல்லை.திரைப் படத்தில் கூறுவதுபோல் ஆசீர்வாதப் பிரட்சனை எல்லாம் வந்ததும் இல்லை.ஜாதகம்,ஜோசியம் என்ற எந்த இடையூறும் இருந்ததில்லை.நன்றாகத் தான் அவர்களின் வாழ்க்கையும் போய்க் கொண்டிருக் கிறது.அந்தத் திரைப் படக் குழந்தையை நினைத்துத் தான் நான் வருத்தப் பட்டேன்.புரிந்து கொள்ளும் ,  மன சாட்சி உடைய பெற்றோர்கள் இப்படியான இழி நிலையை உருவாக்காமல் இருக்கும்பட்சத்தில் ,உணர்ச்சி வசப்பட்டு தவறு செய்யும் இளம் பருவத்தினரை வாழ்வித்து நல்ல சமுதாயத்தை வுருவாக்கலாமே! 

Thursday 12 September 2013

thai and thaimai[mother andmotherhood]

நான் அலுவல கத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சமயம் .1995.இங்கிலாந்து இளவரசி டயானா இறந்த சமயம்.எனக்கும் ,அலுவலகக் கண்காணிப் பாளருக்கும் தாய்மை குறித்துப் பேச்சு.இதே இளவரசி தாய்மை உணர்வுடன் இருந்திருந்தால் இரண்டு பிள்ளைகளை விட்டுப் போயிருக்க மாட்டாள்.நம் இந்தியத் தாய் இப்படி செய்திருக்க மாட்டாள் என்ற ரீதியில் பேசினோம்.தாய் வேறு,தாய்மை உணர்வு வேறு ;பெற்ற தாயாக இல்லாவிடினும் பிள்ளைகளைப் பேணுகின்ற [தன் பிள்ளைகளுக்கு செய்வதனைப் போன்றே ]கடமைகளை செய்கின்றவர் இருக்கின்றனர்.பெற்ற தாயாக இருந்தாலும் பிள்ளைகளைப் புறக்கணிக்கின் ரவர்களும் உண்டு.என் பெண் பிறந்திருந்த நேரம்;நான் அம்மா வீட்டில் இருந்தேன்.பத்தியக் குழம்பு வைத்தி ருந்தார்கள் ,கணவருக்குப் பிடிக்குமே என்றதனால் அம்மாவிடம் சொல்லி அவர்கள் வீட்டிற்குக் கொடுத்தனுப்பினோம் [2முட்டைகளும் போட்டு]மாலையில் எங்கள் வீட்டிற்கு வந்த கணவரிடம் ,குழம்புச்சுவை குறித்துக் கேட்டோம்.அப்படி ஒரு விசயமே அவருக்குத் தெரியப் படுத்தப் படவில்லை.அனைத்தையும் என் மாமியாரே சாப்பிட்டு விட்டிருக்கிறார் என்பது 2நாளைக்குப் பிறகு எங்களுக்குத் தெரிய வந்தது.'கிடைக்கும் பிடி சோறும் தனக்கென உண்ணாது கொடுக்கின்ற கோவிலது'என்றும்' ',நாளெல்லாம் பட்டினியாய் இருந்திடுவாள்;ஒரு நாழிகை நம் பசி பொறுக்க மாட்டாள்'என்றெல்லாம் பாடிய கவிஞர் களை நினைக்கத் தோன்றுகிற தல்லவா?தாய்மை உணர்வு இப்படிச் செய்திருக்காதல்லவா?திரு.வீ.க.தன் 'பெண்மை'எனும் கட்டுரையில் எழுதுவார் 'தெய்வம் என்று எங்கே ஓடுகிறீர் ;தியாக உணர்வுடன் இருக்கும் பெண்ணே தெய்வம் 'என்று. எனவே பெற்ற பிள்ளைகளின் இன்பம் தான் தன் இன்பம் என்று டயானா நினைத்திருந்தால் இறந்திருக்க வாய்ப்பில்லையே!இவ்வாறு சுய நலத்துடன் இருக்கும் தாயிடம் வளரும் பிள்ளைகள் பின்னாளில் பிறரது இன்ப துன்பங்களை அறியும் தன்மை யற்றுத் தானே வளர்கிறார்கள்!எனவே,தாய் என்பவள் தாய்மை உணர்வுடன் இருத்தல் அவசியம்.இல்லையெனில் பிற் காலத்தில் பிள்ளைகளால் வெறுப்புக்கு ஆளாவது கண்கூடு!

Thursday 2 May 2013

mozhium baavangalum

ஒரு மொழியைப் புரிந்து கொள்வது என்பது பேசுவதைக் காட்டிலும் எளிமை என்றுதான் கூற வேண்டும்.பேசுகின்றவர்கள் என்ன பாவனையில் பேசுகின்றார்கள் என்பதனை வைத்து இந்த விஷயம் குறித்துத் தான் பேசுகிறார்கள் என்பது ஓரளவு விளங்கும். என் பெண் பள்ளியில் சேராத

 வயதில் ,நான் நாகையில் பணி புரிந்தேன்.வாரம் ஒருமுறைதான் வீட்டிற்கு வருவது வழக்கம்.என் தங்கை என் பெண்ணை பார்த்துக் கொள்வாள்.கிட்டத் தட்ட 2 வருடங்கள் அவ்வாறு இருந்த நிலையிலும்,நான் மகளிர் விடுதியில் தங்கியிருந்த காலம்.என்னுடன் தங்கியிருந்த,கஸ்டம்ஸ் இல் பணியாற்றிக் கொண்டிருந்த கடலூர் பெண் ஒருத்தியை,தஞ்சையை சுற்றிப் பார்க்கவும் 2நாட்கள் விருந்தினராகவும்,நாகையில் இருந்து அழைத்து வந்திருந்தேன்.[பின்னர் சில ஆண்டுகள் கழித்து அவளது திருமணத்திற்கு செல்ல இயலாது நேரில் வீட்டிற்கு சென்று  பார்த்து வந்தோம்.]தஞ்சைக் கோயில்,சினிமா,புதியதாகத் திறந்திருந்த விமான நிலையம் ஆகியவற்றைப் பார்த்தோம்.என் கணவர் வீட்டினருக்கு நட்பு,பிறரிடம் பண்புடன் பழகும் தன்மை இவையெல்லாம் மருந்துக்கும் கிடையாது என்ற வழக்கத்தின்படி [தாய் வழிப் பழக்கம்;எனவே தொட்டில் பழக்கம் என் வீட்டுக்காரருக்கு.பிள்ளைகளின் நட்புக்கு மட்டும் ஏனோ தடை இல்லை.அதுவரை அவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.]அந்தப் பெண்ணை அழைத்து வந்ததற்கு எங்கள் மொழியிலேயே என்னை கோபிக்கிறார்.நானுமெதிர் வாதம் செய்கிறேன்.இந்த வயதுப் பக்குவம் அப்பொழுது இல்லை.அந்தப் பெண்ணுக்கோ என்னவோ சண்டை என்று புரிகிறது.எதற்கு என்று விளங்கவில்லை.நான் வளர்ந்த சூழலுக்கு முற்றிலும் மாறானது இவர் வளர்ந்தது.என்னால் பயந்து திருட்டுத் தனமாகவெல்லாம் பேசவோ,செயல் படவோ முடியாது.அதுவுமன்றியும்,எங்கள் வீட்டிற்கு யார் வந்தாலும் [காய்கறிக் கார அம்மா,கொத்தனார்,ஆசாரி,கல்லூரி நண்பர்கள் ஆசிரிய,ஆசிரியைகள் யாராயினும் ]நன்றாகப் பேசுவதும்,உபசரிப்பதும் இயல்பாகவே இருக்கும் குணம்.அந்தப்பண்பு இவரை,இவர் குணத்தை எதிர்க்க செய்தது.நல்லவேளை,அந்தப் பெண் திருமண மாகதவள் என்பதனால் என்ன வென்று கேட்கவில்லை;நானுமவள் பொருட்டுத் தான் பேச்சு என்று காட்டிக் கொள்ளவும் இல்லை.எனவே,மொழி யை,புரிந்து கொள்வது,பாவங்களை வைத்து எளிமை எனலாம்.பேசுவது கடினமே.முயற்சியும் ஆர்வமுமே எளிமைப் படுத்தும்.நான் ராஞ்சியில் இருந்து ட்ரெயினில் திரும்பி வரும் பொழுது அதில் வந்தவர்கள் கன்னியாகுமரியில் பார்க்கக் கூடிய இடங்களைப் பற்றிப் பேசிக் கொண்டு வந்தார்கள்.ஹிந்தியில் தான் .ஊர் பெயர்களைக் குறிப் பிட்டதனால் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.நானும் ஊர் பெயர்களை மட்டும் அவர்களிடம் கூறினேன்.சென்னையில் படிக்கும் கல்லூரி மாணவன் ஒருவனும் சென்னையை சுற்றியுள்ள இடங்கள் குறித்து ஆங்கிலத்தில் கேட்டான்.எனக்குத் தெரிந்த இடங்களையும் அரைகுறை ஆங்கிலத்தில் கூறியதுடன் பிற சென்னை மாணவர்களிடம் கேட்கக் கூறினேன்.என் பையன் ஹிந்தி பேசுவதைக் கேட்டு,எனக்கும் அந்த மொழியைப் பேச ஆசையாக இருந்தது.மொழியைப் பேசுபவர்களுடன் சேர்ந்து நாமும் பேசினால் வந்து விடும் இல்லையா?முன்பெல்லாம் எங்கள் எதிர் வீட்டிலிருக்கும் பேங்க் காரக் குடும்பம் பெங்காலி கலந்த ஹிந்தி பேசுவார்கள்.அதில் மௌசி [சித்தி]சுந்தர் [அழகாக]கித்னா [எத்தனை]என்ற வார்த்தைகளை தெரிந்து கொண்டேன்.வங்காள மொழியில் ஜொமாய் என்பது மாப்பிள்ளை.எங்கள் மொழியிலும் தான்.எதையுமே கூர்ந்து கவனிப்பதுடன் ஆர்வம் முக்கியம்.என் பையனுக்கு செல் போனில் மெசேஜ் இலவசம் என்பதனால் நான்டைப்        பண்ணக் கற்றுக்கொண்டேன். எனவே,கற்றுக் கொள்வது ஆர்வத்தின் அடிப் படையில் தானே!

Monday 29 April 2013

manivilaa.

மணிவிழா எனும் 60ஆம் கலியாணம் குறித்துக் கூறும் பொழுது மு.க.ஸ்டாலின் பற்றிப் படிக்க நேர்ந்தது. அவருக்குப் பெயரன்,பெயர்த்திகள் பிறந்து பின் அந்தத் திருமணம்.அதைவிட கருணாநிதியை நினைத்தால் இன்னும் ஆச்சரியம்.தன் மகனின் 60யையே பார்க்கிறாரே!எனக்கு நினைவு தெரிந்து இந்த அம்மா திருமணம் செய்து வந்த புதிதில், பட்டு வேலை செய்து வந்த முதலியார் ஒருவரின் 60ஆம் திருமண த்தி ற்கு,வேறு சில மகளிருடன் சேர்ந்து சென்றோம்.[என் சிறு வயது அறிவு அவரை முதலாளி என்று நினைத்தது.ஆனால் இனத்தில் முதலியாரைத் தான் அவ்வாறு குறிப்பிட்டிருப் பார்கள் போலும்.இன்றும் அந்த வீடு பணக்கார தோரணையில் தான் இருக்கிறது.]அவர் தன் மனைவியுடன் திருமணக் கோலத்தில் கையில் விபூதித் தட்டுடன் நின்று ஆசீர்வாதம் செய்து கொண்டிருந்தார்.எல்லோரும் வரிசையில் நின்று தட்டில் காசோ பணமோ போடுவதும் ,அவரிடமிருந்து பய பக்தியுடன் வணங்கி விபூதி பெறுவதும் எனக்கு புதுமையான நிகழ்ச்சி.இன்னும் சில வருடங்கள் கழிந்ததும் எங்கள் வலப் பக்கத்து வீட்டுக் காரருக்கு 80 திருமணம்.சல்லடையில் மணமக்களுக்கு நீர் ஊற்றினார்கள்.[அந்தக் குடும்பம் சரியான கருமிக் குடும்பம்.இந்தக் கஞ்சத் தினால் அவர் பையனுக்குத் திருமணம் செய்த சேலத்துப் பெண் சொல்லாமல் பிறந்த வீட்டுக்கே போய் விட்டது தனிக் கதை.]இவர்கூட இவ்வாறெல்லாம் செய்து கொள்கிறாரே என்று எனக்கு கேலி கலந்த ஆச்சரியம்.அப்பொழுதெல்லாம் அவ்வளவாக சிந்திக்கத் தெரியாத வயது.கேலியும் சிரிப்பும் தான் வாழ்க்கை.எனவே மகிழ்ச்சி யாக கேலி செய்து பொழுது போக்குவோம்.சமீபத்தில் என் அண்ணா ஊரினரையே கூட்டி 60 செய்து கொண்டாராம்.என்னிடம் சொன்னவர் களிடமெல்லாம் 'கல்யாணம்தான் யாருக்கும் தெரியாமல் செய்து கொண்டார்.பாவம் இதில் அவருக்கு மகிழ்ச்சி என்றால் சரிதான்'என்றேன்.ஏனோ இந்த மாதிரிசெயல் கள் எனக்கு மகிழ்வைத் தருவதில்லை.திருமணநாள் என்பது நினைவில் இருக்கும்.கொண்டாட்டத்தில் இருந்ததில்லை.பள்ளியில் எங்கள் 25ஆவது திருமண தினம் என்று கூறி,வம்படியாக பிற ஆசிரியைகள் என்னிடம் இனிப்பு காரம் வாங்க வைத்து விட்டார்கள்.நானும் நட்பு நிலையில் இந்த சாக்கில் சாப்பிடட்டும் என்று சொல்லியே வாங்கிக் கொடுத்தேன் என் மகிழ்ச்சி எல்லாம் பேப்பர் valuvation சென்று வந்த பணத்தில் பிள்ளைகளுக்கு உடை,சிறிய அளவில் ஆபரணங்கள்,தேவையான பொருட்கள் வாங்கிக் கொடுப்பதில் தான்.பணம் போதாது என்றால் என் கணவரிடம் வாதடியாவது கேட்டு அவர்களுக்கு வாங்கிக் கொடுத்து விட்டால் ரொம்பப் பெருமையாக இருக்கும் அவரும் பிள்ளைகள் என்றால் பெரும் பாலும் கொடுத்து விடுவார்.இதைத் தாண்டி தனிப்பட்ட மகிழ்ச்சி எனக்கு ஏதும் இல்லை.அப்படி யாரும் மகிழ்விக்க நினைத்தால் சங்கடப்பட வேண்டியிருக்குமோ என்னவோ?மகிழ்ச்சிக்குப் பதில் சங்கடத்தை வாங்குவது கொடுமை அல்லவா?

Wednesday 24 April 2013

eliya vaalkkai

              என்       கல்லூரிப் பருவம் மிக எளிமையான ஒன்றாக இருந்திருக்கிறது.பள்ளி வாழ்க்கை முடிந்து புகுமுக வகுப்பில் சென்று அமர்ந்தவுடன் ஆசிரியைகள் செய்து வரும் உடை அழகும்,பேசும் கம்பீரமும் ,நடை வேகமும் ,முக்கியமாக அவர்கள் பேசும் ஆங்கிலமும் என்னை வியக்க வைத்தது.ஓரிரு உடைகளையே மாற்றி உடுத்தும் எங்கள் ஊரின் பழக்கத்துக்கு, எளிமைக்கு இவை வியப்பை ஏற்படுத்தியதில் வியப்பொன்றும் இல்லை.எங்கள் ஊரில் இருந்து எங்கள் இனப்பெண்களில் ,கல்லூரிக்கு செல்லும் முதல் பெண் நான் தானே!எங்கள் தெருவில் இருந்த ஒருவர் ,என்னை அடிக்கடி கேலி செய்து பேசும் வார்த்தை 'என்ன படித்து என்ன ,சட்டி பானை தானே கழுவப் போகிறாய்'என்பதுதான்.{அவருக்கு படிப்பு வாசமே இல்லை என்பதுடன் திக்கித் திக்கித் தான் பேசுவார் என்பது வேறு விஷயம்.}கல்லூரிக்கு வரும் பெரும் பாலானவர்கள் உடை விசயத்தில் எளிமையாகத் தான் வருவர்.அதனால் வேற்றுமை தெரியாது.இப்படி இருக்கும் பொழுது எங்கள் வீட்டிற்கு தயிர் விற்க வரும் ஒரு அம்மா தன் [அவளும் வேறு ஒரு கிராமத்தில் இருந்து வருபவள்.]பெயர்த்தி கல்லூரியில் படிப்பதாககவும்,5 நாட்களுக்கு 5 நிறத்தில் புடவை கேட்பதாகவும் பெருமையுடன் கூறியது எனக்கு வியப்பை தந்ததுடன் பொறாமை யாகவும் இருந்தது.அப்பொழுது கல்லூரியின் DRESSCODE புகுமுக வகுப்பில்,டிகிரி 1ஆம் வருடத்தில் மட்டும் பாவாடை தாவணி.பிறகு கட்டாயமாக புடவை தான்.புது டிரஸ் என்பது மிகக் குறைந்த விலை மற்றும் தரமாகத் தான் இருக்கும்.அந்தப் பழக்கம் தான் என்னை எளிமைப் படுத்தி இருக்கிறது.மேலும் 6,7வகுப்பு படிக்கும் வரை நெசவு வேலைக்கு சென்று [விடுமுறை நாட்களில்]காசு சேர்த்து அடுத்தாண்டு புத்தகம் ,பழைய விலைக்கு வாங்கி விடுவதற்கு அப்பா பழக்கப் படுத்தினார்.அவ்வாறு எளிய வாழ்க்கை வாழ்ந்த தனால் ,இன்றளவும் சிறப்பாக இருக்க முடிகிறது என்று நம்புகிறேன்." இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் '"என்ற வள்ளுவரின் வாக்கு வாழ்க்கைக்கு எவ்வளவு பொருந்து கிறது.

mudalaiyum moorkkanum

நான் நன்னூல் இலக்கணம் படிக்கும் பொழுது 'முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா'என்று வரும்.விடா என்று அகிறிணைப் பன்மையில் கூறப் பட்டிருக்கும்.மூர்க்கன் ஆகிய மனிதனை அகிறினையில் சேர்த்திருப்பது எவ்வளவு பொருத்தம் என்பதனை என் வாழ்வில் அனுபவ பூர்வமாக உணர்கிறேன்.பிறரின் உணர்வுகள் என்ன,அவர்களுக்கு தோன்றும் சங்கடங்கள் என்ன,அவர்களின் துன்பத்தில் நாம் ஏதும் உதவ முடிகிறதா,உதவ முடியாவிட்டாலும் நெருக்கடி தராத உதவியாவது செய்ய அறிவு வேலை செய்யாத இது போன்றவர்களை உயர் திணையில் சேர்க்காதது எவ்வளவு பொருத்தம்."அறிவினான் ஆகுவதுண்டோ பிறிதின் நோய் தன் நோய் போல் போற்றாக் கடை"என்று வள்ளுவரும் இது போன்றவர்களை,அறிவில்லாதவர் என்று திட்டியும்,பிற உயிர்களின் துன்பத்தை அறிந்து கொள்ளாத அறிவினால் பயனில்லை என்று கடுமையாகக் கூறியிருக்கிறாரே!  தான் ,தன் விருப்பம்,தான் நினைக்கும் எண்ணங்கள் மட்டுமே உலகம் என்ற மூர்க்கத் தனம் கொண்டவர் களெல்லாம் அகிறினை அன்றி வேறென்ன?