Thursday 2 May 2013

mozhium baavangalum

ஒரு மொழியைப் புரிந்து கொள்வது என்பது பேசுவதைக் காட்டிலும் எளிமை என்றுதான் கூற வேண்டும்.பேசுகின்றவர்கள் என்ன பாவனையில் பேசுகின்றார்கள் என்பதனை வைத்து இந்த விஷயம் குறித்துத் தான் பேசுகிறார்கள் என்பது ஓரளவு விளங்கும். என் பெண் பள்ளியில் சேராத

 வயதில் ,நான் நாகையில் பணி புரிந்தேன்.வாரம் ஒருமுறைதான் வீட்டிற்கு வருவது வழக்கம்.என் தங்கை என் பெண்ணை பார்த்துக் கொள்வாள்.கிட்டத் தட்ட 2 வருடங்கள் அவ்வாறு இருந்த நிலையிலும்,நான் மகளிர் விடுதியில் தங்கியிருந்த காலம்.என்னுடன் தங்கியிருந்த,கஸ்டம்ஸ் இல் பணியாற்றிக் கொண்டிருந்த கடலூர் பெண் ஒருத்தியை,தஞ்சையை சுற்றிப் பார்க்கவும் 2நாட்கள் விருந்தினராகவும்,நாகையில் இருந்து அழைத்து வந்திருந்தேன்.[பின்னர் சில ஆண்டுகள் கழித்து அவளது திருமணத்திற்கு செல்ல இயலாது நேரில் வீட்டிற்கு சென்று  பார்த்து வந்தோம்.]தஞ்சைக் கோயில்,சினிமா,புதியதாகத் திறந்திருந்த விமான நிலையம் ஆகியவற்றைப் பார்த்தோம்.என் கணவர் வீட்டினருக்கு நட்பு,பிறரிடம் பண்புடன் பழகும் தன்மை இவையெல்லாம் மருந்துக்கும் கிடையாது என்ற வழக்கத்தின்படி [தாய் வழிப் பழக்கம்;எனவே தொட்டில் பழக்கம் என் வீட்டுக்காரருக்கு.பிள்ளைகளின் நட்புக்கு மட்டும் ஏனோ தடை இல்லை.அதுவரை அவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.]அந்தப் பெண்ணை அழைத்து வந்ததற்கு எங்கள் மொழியிலேயே என்னை கோபிக்கிறார்.நானுமெதிர் வாதம் செய்கிறேன்.இந்த வயதுப் பக்குவம் அப்பொழுது இல்லை.அந்தப் பெண்ணுக்கோ என்னவோ சண்டை என்று புரிகிறது.எதற்கு என்று விளங்கவில்லை.நான் வளர்ந்த சூழலுக்கு முற்றிலும் மாறானது இவர் வளர்ந்தது.என்னால் பயந்து திருட்டுத் தனமாகவெல்லாம் பேசவோ,செயல் படவோ முடியாது.அதுவுமன்றியும்,எங்கள் வீட்டிற்கு யார் வந்தாலும் [காய்கறிக் கார அம்மா,கொத்தனார்,ஆசாரி,கல்லூரி நண்பர்கள் ஆசிரிய,ஆசிரியைகள் யாராயினும் ]நன்றாகப் பேசுவதும்,உபசரிப்பதும் இயல்பாகவே இருக்கும் குணம்.அந்தப்பண்பு இவரை,இவர் குணத்தை எதிர்க்க செய்தது.நல்லவேளை,அந்தப் பெண் திருமண மாகதவள் என்பதனால் என்ன வென்று கேட்கவில்லை;நானுமவள் பொருட்டுத் தான் பேச்சு என்று காட்டிக் கொள்ளவும் இல்லை.எனவே,மொழி யை,புரிந்து கொள்வது,பாவங்களை வைத்து எளிமை எனலாம்.பேசுவது கடினமே.முயற்சியும் ஆர்வமுமே எளிமைப் படுத்தும்.நான் ராஞ்சியில் இருந்து ட்ரெயினில் திரும்பி வரும் பொழுது அதில் வந்தவர்கள் கன்னியாகுமரியில் பார்க்கக் கூடிய இடங்களைப் பற்றிப் பேசிக் கொண்டு வந்தார்கள்.ஹிந்தியில் தான் .ஊர் பெயர்களைக் குறிப் பிட்டதனால் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.நானும் ஊர் பெயர்களை மட்டும் அவர்களிடம் கூறினேன்.சென்னையில் படிக்கும் கல்லூரி மாணவன் ஒருவனும் சென்னையை சுற்றியுள்ள இடங்கள் குறித்து ஆங்கிலத்தில் கேட்டான்.எனக்குத் தெரிந்த இடங்களையும் அரைகுறை ஆங்கிலத்தில் கூறியதுடன் பிற சென்னை மாணவர்களிடம் கேட்கக் கூறினேன்.என் பையன் ஹிந்தி பேசுவதைக் கேட்டு,எனக்கும் அந்த மொழியைப் பேச ஆசையாக இருந்தது.மொழியைப் பேசுபவர்களுடன் சேர்ந்து நாமும் பேசினால் வந்து விடும் இல்லையா?முன்பெல்லாம் எங்கள் எதிர் வீட்டிலிருக்கும் பேங்க் காரக் குடும்பம் பெங்காலி கலந்த ஹிந்தி பேசுவார்கள்.அதில் மௌசி [சித்தி]சுந்தர் [அழகாக]கித்னா [எத்தனை]என்ற வார்த்தைகளை தெரிந்து கொண்டேன்.வங்காள மொழியில் ஜொமாய் என்பது மாப்பிள்ளை.எங்கள் மொழியிலும் தான்.எதையுமே கூர்ந்து கவனிப்பதுடன் ஆர்வம் முக்கியம்.என் பையனுக்கு செல் போனில் மெசேஜ் இலவசம் என்பதனால் நான்டைப்        பண்ணக் கற்றுக்கொண்டேன். எனவே,கற்றுக் கொள்வது ஆர்வத்தின் அடிப் படையில் தானே!