சமீபத்து வார இதழ் ஒன்றில் திருமணம் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு 20
வருடங்களுக்கு முன்னாலொலி பரப்பப் படும் இசைத் தட்டுகள்,அதற்காக,வேலையை விட்டு அங்கேயே சுற்றிக் கொண்டிருக்கும் பையன்கள் என்று சில சுவாரசியமான பகுதியைப் படித்தேன்.நாங்கள் சிறு வயதினராய் இருக்கும் பொழுது கல்யாண வீட்டில் loudspeaker வைத்து விட்டால் ரொம்ப ஜாலி ஆகி விடுவோம்.பாட்டு கேட்டுக் கொண்டே இருக்கலாம் அல்லவா?எங்கள் வீட்டிலேயே சிலர் திருமணம் வைத்துக் கொள்வார்கள்.வீடு பெரியது.அப்பொழுதெல்லாம் இலவசமாகவே வீட்டைக் கொடுப்போம்.ரொம்பப் பெருமை யாக இருக்கும்.அது போகட்டும்.எங்கள் தெருவில் எங்கள் உறவினர் வீட்டுத் திருமணம்.என்ன காரணமோ,பகையோ தெரியவில்லை.எங்களை அழைக்கவில்லை.அந்த வீட்டுத் திண்ணையில் ரேடியோ போடுபவர் தன்னுடைய கருவிகளை வைத்துப் பாடல்களை ஒலிபரப்புகிறார்.சுற்றியும் பையன்கள்.ஒலித்தட்டு ஊசியில் வைத்து இயக்கப் படுவது.அந்த வேலையை செய்வதற்குத் தான் கும்பல்.இந்தக் கும்பலில்தான் பள்ளிக்கு செல்லும் வேலையை விட்டுவிட்டு காலையிலேயே என் அண்ணனும் அங்கு போய் உட்கார்ந்திருக்கிறான்.(அப்பொழுதெல்லாம் 'ன்'தான்.)எங்கள் அப்பா:எங்கெஅவன்?நான்:அந்த வீட்டுல போய் உட்கார்ந்து இருக்கான்.அப்பா:போய் கூப்பிட்டுக்கிட்டு வாஅவனை.அன்னைக்கு சரியான மண்டகப்படி அவனுக்கு.இப்படித்தான் எனக்கும் அவனுக்கும் சிறு வயது முதல் பகை ஆரம்பித்திருக்கும்.இந்த பாட்டு என்றதும் என் நினைவுக்கு வருவது ரேடியோ பெட்டிதான்.எங்கள் தெருவில் ஒரே ஒருவர் வீட்டில் மட்டும்தான் அப்பொழுது ரேடியோ இருந்தது.நான் என் சிறு வயது தங்கையைப் பார்த்துக் கொள்ளும் சாக்கில் அந்த வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கொள்வேன்.cyelon ஒலிபரப்புப் பாடல்கள் அப்பொழுது இனிமையாக இருக்கும்.(தமிழ்ப் பாடல்கள்தான்.)1984வரைகூட இலங்கை வானொலிப் பாடல்களை இனிமையாகக் கேட்க முடிந்தது.ம்....அப்புறம் எங்கள் வீட்டிலும் ஒரு ரேடியோவை என் அண்ணன் வேலைக்கு சென்றவுடன் வாங்கினான்.எங்கள் எல்லாருக்கும் எட்டாத உயரத்தில் வைக்கப்பட்டது.அப்பா நியூஸ் மட்டும் கேட்பார்.அவர் இல்லாத நேரத்தில் நாங்கள் பாட்டு கேட்போம்.ஸ்டூலில் ஏறித்தான் on பண்ணுவோம்.அப்புறம் ஒருநாள் அப்பாவுக்கும்,அண்ணனுக்கும் ஏதோ மனவருத்தம்.ரேடியோவை தூக்கிப் போட்டு அப்பா உடைத்து விட்டாரே!கொஞ்ச நாள் கழித்து எனக்குத் திருமணம் ஆனது.மாமியார் வீட்டிலும் ஒரு பெட்டி இருந்தது.உண்மையிலேயே மாமியாருக்கான வீடுதான் அது.எந்நேரமும் மாமி அந்தப் பெட்டி இடம்தான் இருப்பார்.அது தவிர ஒரு transistor ம் அவர் கையருகில் இருக்கும்.ஒரு பெண்மணி ரேடியோ வுடன் பொழுதைக் கழிப்பது எனக்கு அதிசயம்.எங்கள் அம்மாவுக்கு அந்த உரிமை கிடையாதே!அதனால்தான் எனக்கு அப்படி ஒரு வியப்பு.ம்....இன்றைக்கு காலம் எப்படியெல்லாம் மாறிவிட்டது.loudspeaker இல்லை;பையன்களும் பெரிதாக நினைப்பதில்லை.I.PAD.2எங்கள் வீட்டில் கேட்பாரற்றுக் கிடக்கிறது.என் கணவர் மட்டும் செல்போன்,T.V.,என்று மாற்றி,மாற்றி பாட்டு கேட்டுக் கொண்டு இருக்கிறார்.எனக்கு சிறு வயதில் இருந்த பாட்டு கேட்கும் ஆவல் அறவே இல்லை.
வருடங்களுக்கு முன்னாலொலி பரப்பப் படும் இசைத் தட்டுகள்,அதற்காக,வேலையை விட்டு அங்கேயே சுற்றிக் கொண்டிருக்கும் பையன்கள் என்று சில சுவாரசியமான பகுதியைப் படித்தேன்.நாங்கள் சிறு வயதினராய் இருக்கும் பொழுது கல்யாண வீட்டில் loudspeaker வைத்து விட்டால் ரொம்ப ஜாலி ஆகி விடுவோம்.பாட்டு கேட்டுக் கொண்டே இருக்கலாம் அல்லவா?எங்கள் வீட்டிலேயே சிலர் திருமணம் வைத்துக் கொள்வார்கள்.வீடு பெரியது.அப்பொழுதெல்லாம் இலவசமாகவே வீட்டைக் கொடுப்போம்.ரொம்பப் பெருமை யாக இருக்கும்.அது போகட்டும்.எங்கள் தெருவில் எங்கள் உறவினர் வீட்டுத் திருமணம்.என்ன காரணமோ,பகையோ தெரியவில்லை.எங்களை அழைக்கவில்லை.அந்த வீட்டுத் திண்ணையில் ரேடியோ போடுபவர் தன்னுடைய கருவிகளை வைத்துப் பாடல்களை ஒலிபரப்புகிறார்.சுற்றியும் பையன்கள்.ஒலித்தட்டு ஊசியில் வைத்து இயக்கப் படுவது.அந்த வேலையை செய்வதற்குத் தான் கும்பல்.இந்தக் கும்பலில்தான் பள்ளிக்கு செல்லும் வேலையை விட்டுவிட்டு காலையிலேயே என் அண்ணனும் அங்கு போய் உட்கார்ந்திருக்கிறான்.(அப்பொழுதெல்லாம் 'ன்'தான்.)எங்கள் அப்பா:எங்கெஅவன்?நான்:அந்த வீட்டுல போய் உட்கார்ந்து இருக்கான்.அப்பா:போய் கூப்பிட்டுக்கிட்டு வாஅவனை.அன்னைக்கு சரியான மண்டகப்படி அவனுக்கு.இப்படித்தான் எனக்கும் அவனுக்கும் சிறு வயது முதல் பகை ஆரம்பித்திருக்கும்.இந்த பாட்டு என்றதும் என் நினைவுக்கு வருவது ரேடியோ பெட்டிதான்.எங்கள் தெருவில் ஒரே ஒருவர் வீட்டில் மட்டும்தான் அப்பொழுது ரேடியோ இருந்தது.நான் என் சிறு வயது தங்கையைப் பார்த்துக் கொள்ளும் சாக்கில் அந்த வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கொள்வேன்.cyelon ஒலிபரப்புப் பாடல்கள் அப்பொழுது இனிமையாக இருக்கும்.(தமிழ்ப் பாடல்கள்தான்.)1984வரைகூட இலங்கை வானொலிப் பாடல்களை இனிமையாகக் கேட்க முடிந்தது.ம்....அப்புறம் எங்கள் வீட்டிலும் ஒரு ரேடியோவை என் அண்ணன் வேலைக்கு சென்றவுடன் வாங்கினான்.எங்கள் எல்லாருக்கும் எட்டாத உயரத்தில் வைக்கப்பட்டது.அப்பா நியூஸ் மட்டும் கேட்பார்.அவர் இல்லாத நேரத்தில் நாங்கள் பாட்டு கேட்போம்.ஸ்டூலில் ஏறித்தான் on பண்ணுவோம்.அப்புறம் ஒருநாள் அப்பாவுக்கும்,அண்ணனுக்கும் ஏதோ மனவருத்தம்.ரேடியோவை தூக்கிப் போட்டு அப்பா உடைத்து விட்டாரே!கொஞ்ச நாள் கழித்து எனக்குத் திருமணம் ஆனது.மாமியார் வீட்டிலும் ஒரு பெட்டி இருந்தது.உண்மையிலேயே மாமியாருக்கான வீடுதான் அது.எந்நேரமும் மாமி அந்தப் பெட்டி இடம்தான் இருப்பார்.அது தவிர ஒரு transistor ம் அவர் கையருகில் இருக்கும்.ஒரு பெண்மணி ரேடியோ வுடன் பொழுதைக் கழிப்பது எனக்கு அதிசயம்.எங்கள் அம்மாவுக்கு அந்த உரிமை கிடையாதே!அதனால்தான் எனக்கு அப்படி ஒரு வியப்பு.ம்....இன்றைக்கு காலம் எப்படியெல்லாம் மாறிவிட்டது.loudspeaker இல்லை;பையன்களும் பெரிதாக நினைப்பதில்லை.I.PAD.2எங்கள் வீட்டில் கேட்பாரற்றுக் கிடக்கிறது.என் கணவர் மட்டும் செல்போன்,T.V.,என்று மாற்றி,மாற்றி பாட்டு கேட்டுக் கொண்டு இருக்கிறார்.எனக்கு சிறு வயதில் இருந்த பாட்டு கேட்கும் ஆவல் அறவே இல்லை.