Thursday 28 February 2013

loud speaker and boys

சமீபத்து வார இதழ் ஒன்றில் திருமணம் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு 20
வருடங்களுக்கு முன்னாலொலி பரப்பப் படும் இசைத் தட்டுகள்,அதற்காக,வேலையை விட்டு அங்கேயே சுற்றிக் கொண்டிருக்கும் பையன்கள் என்று சில சுவாரசியமான பகுதியைப் படித்தேன்.நாங்கள் சிறு வயதினராய் இருக்கும் பொழுது கல்யாண வீட்டில் loudspeaker வைத்து விட்டால் ரொம்ப ஜாலி ஆகி விடுவோம்.பாட்டு கேட்டுக் கொண்டே இருக்கலாம் அல்லவா?எங்கள் வீட்டிலேயே சிலர் திருமணம் வைத்துக் கொள்வார்கள்.வீடு பெரியது.அப்பொழுதெல்லாம் இலவசமாகவே வீட்டைக் கொடுப்போம்.ரொம்பப் பெருமை யாக இருக்கும்.அது போகட்டும்.எங்கள் தெருவில் எங்கள் உறவினர் வீட்டுத் திருமணம்.என்ன காரணமோ,பகையோ தெரியவில்லை.எங்களை அழைக்கவில்லை.அந்த வீட்டுத் திண்ணையில் ரேடியோ போடுபவர் தன்னுடைய கருவிகளை வைத்துப் பாடல்களை ஒலிபரப்புகிறார்.சுற்றியும் பையன்கள்.ஒலித்தட்டு ஊசியில் வைத்து இயக்கப் படுவது.அந்த வேலையை செய்வதற்குத் தான் கும்பல்.இந்தக் கும்பலில்தான் பள்ளிக்கு செல்லும் வேலையை விட்டுவிட்டு காலையிலேயே என் அண்ணனும் அங்கு போய் உட்கார்ந்திருக்கிறான்.(அப்பொழுதெல்லாம் 'ன்'தான்.)எங்கள் அப்பா:எங்கெஅவன்?நான்:அந்த வீட்டுல போய் உட்கார்ந்து இருக்கான்.அப்பா:போய் கூப்பிட்டுக்கிட்டு வாஅவனை.அன்னைக்கு சரியான மண்டகப்படி அவனுக்கு.இப்படித்தான் எனக்கும் அவனுக்கும் சிறு வயது முதல் பகை ஆரம்பித்திருக்கும்.இந்த பாட்டு என்றதும் என் நினைவுக்கு வருவது ரேடியோ பெட்டிதான்.எங்கள் தெருவில் ஒரே ஒருவர் வீட்டில் மட்டும்தான் அப்பொழுது ரேடியோ இருந்தது.நான் என் சிறு வயது தங்கையைப் பார்த்துக் கொள்ளும் சாக்கில் அந்த வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கொள்வேன்.cyelon ஒலிபரப்புப் பாடல்கள் அப்பொழுது இனிமையாக இருக்கும்.(தமிழ்ப் பாடல்கள்தான்.)1984வரைகூட இலங்கை வானொலிப் பாடல்களை இனிமையாகக் கேட்க முடிந்தது.ம்....அப்புறம் எங்கள் வீட்டிலும் ஒரு ரேடியோவை என் அண்ணன் வேலைக்கு சென்றவுடன் வாங்கினான்.எங்கள் எல்லாருக்கும் எட்டாத உயரத்தில் வைக்கப்பட்டது.அப்பா நியூஸ் மட்டும் கேட்பார்.அவர் இல்லாத நேரத்தில் நாங்கள் பாட்டு கேட்போம்.ஸ்டூலில் ஏறித்தான் on பண்ணுவோம்.அப்புறம் ஒருநாள் அப்பாவுக்கும்,அண்ணனுக்கும் ஏதோ மனவருத்தம்.ரேடியோவை தூக்கிப் போட்டு அப்பா உடைத்து விட்டாரே!கொஞ்ச நாள் கழித்து எனக்குத் திருமணம் ஆனது.மாமியார் வீட்டிலும் ஒரு பெட்டி இருந்தது.உண்மையிலேயே மாமியாருக்கான வீடுதான் அது.எந்நேரமும் மாமி அந்தப் பெட்டி இடம்தான் இருப்பார்.அது தவிர ஒரு transistor ம் அவர் கையருகில் இருக்கும்.ஒரு பெண்மணி ரேடியோ வுடன் பொழுதைக் கழிப்பது எனக்கு அதிசயம்.எங்கள் அம்மாவுக்கு அந்த உரிமை கிடையாதே!அதனால்தான் எனக்கு அப்படி ஒரு வியப்பு.ம்....இன்றைக்கு காலம் எப்படியெல்லாம் மாறிவிட்டது.loudspeaker இல்லை;பையன்களும் பெரிதாக நினைப்பதில்லை.I.PAD.2எங்கள் வீட்டில் கேட்பாரற்றுக் கிடக்கிறது.என் கணவர் மட்டும் செல்போன்,T.V.,என்று மாற்றி,மாற்றி பாட்டு கேட்டுக் கொண்டு இருக்கிறார்.எனக்கு சிறு வயதில் இருந்த பாட்டு கேட்கும் ஆவல் அறவே இல்லை. 

Wednesday 27 February 2013

samukamum tirumanagalum

எங்கள் வீட்டில் குடி இருப்பவர் வீட்டிற்கு சம்பள ஆள் ஒருவர் வருகிறார். (அவர்கள் கடை வைத்திருப்பவர்கள்)ஒரு காலை நேரத்தில் குடிக்கத் தண்ணீர் கேட்டவர் ஒரு லிட்டர் தண்ணீரையும் குடித்து விட்டார்.என்ன காலையிலேயே வெறும் வயிற்றில் இவ்வளவா என நினைத்து அவரிடம் பேச்சு கொடுத்தேன்.விருப்பத் திருமணம் செய்து கொண்டவர்,பெண் இந்து,இவர் முஸ்லிம்.பெண் குழந்தையும் உண்டு.இரு வீட்டினரின் ஆதரவும் கிடையாது.B.A.HISTORY படித்தவர்,அந்தப் பெண் B.Sc.B.Ed.(இருவருக்கும் என்றைக்கு வேலை கிடைக்கும்?எப்பொழுது இவர்கள் அமைதியான வாழ்க்கையை எதிர் கொள்வது?குழந்தையை யார் பார்த்துக் கொள்வார்கள்?இவருக்கு கிடைக்கும் வருமானம் எப்படி போதும் என்றெல்லாம் நான் நினைத்து என்னுள் வருத்தம் கொண்டேன்.)அந்தப் பெண் குறிப்பிட்ட இனத்தவரா எனக் கேட்டேன்.எப்படி சரியாகக் கேட்டீர்கள் என்று ஆச்சரியப் பட்டார்.பொதுவாக ஆணோ,பெண்ணோ.கலப்புத் திருமணம் என்றால் பெற்றோர் தயங்குவது சமூகத் தவரின் கேள்விகளுக்கும்,பார்வைக்கும் தான்.பிறகு தான் பொருளாதாரம்,இன்ன பிற செய்திகள்.எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி இந்து.முஸ்லிம் ஆடவரை மணந்து,இரு பெண் குழந்தைகள்.ஆனால்,அரசுஉத்யோகம்.பெரிய பெண் 9ஆம் வகுப்பு படிக்கும் பொழுது தான் இருவருள்ளும் கொள்கை வேறுபாடு.கணவர் தங்களின் இனத்தின் படி பெண்ணுக்கு உடனே திருமணம் செய்ய விழைகிறார்.அந்தப் பெண் மணியோ பெண்களைப் படிக்க வைக்க,நல்ல நிலைக்குக் கொண்டு வர விரும்புகிறார்.விளைவு கணவரைப் பிரிந்து,தனி ஆளாக நின்று பெண்களைப் படிக்கவும் வைக் கிறார்.கணவர் குடிமகன் ஆகி விட்டாராம்.அந்தப் பெண்மணி பொருளாதார ரீதியில் கணவரை சார்ந்து இல்லை. பெண்கள் படிப்பில் சிறந்தவர்கள். அவர்கள் பர்தா போடவில்லை.எனினும் சிறிய வீட்டில் அட்ஜஸ்ட் செய்து நம்பிக்கையுடன் வாழ்க்கை நடத்துகிறார்கள்.இந்தப் பெண்களின் திருமண வாழ்க்கை எவ்வாறு அமையும் என்பதும் தெரியாது.எனவே,மதக்கலப்புத் திருமணம் ஏதேனும் ஒரு பின்புல ஆதரவில் நிகழ்தல் நல்லது.அல்லது கணவரின் முழுமை யான புரிதல் அவசியம்.இடையில் கருத்து வேறு பட்டால் பிள்ளை களின் அமைதி எட்டாக் கனி ஆகி விடும்.

Saturday 16 February 2013

maarkali bajanai

எங்கள் ஊரில் மார்கழி 30நாட்களும் பஜனைக் கோஷ்டி தெருக்கள் தோறும்,விடிகாலை 6மணிக்குள் வருவதுண்டு.எங்கள் தெருவிற்கு 6,6.30.க்குள் தினந்தோறும் வந்து விடுவர்.இதில் சிறப்பு என்னவென்றால் ,அவர்களைச்சுற்றி வந்து வணங்க வேண்டும்.எங்கள் அப்பா எனக்கு சொல்லிக் கொடுத்த மற்றுமொரு பழக்கம்.அதுவும் எப்படித் தெரியுமா?4,5ஆம் வகுப்பு சிறுமியாக இருக்கும் பொழுதே பழக்கப் படுத்தப் பட்டது.காலையில் 4மணிக்கே எழுந்து வாசலில் கோலம் போட்டு (தெருவில் யார் பெரிய....கோலம் போடுகிறார்கள் என்பது போட்டியாக இருந்த பருவம்)ஆற்றுக்குப் போய் குளித்து வந்து ,குடம் நிறைய நீர் எடுத்து (தூக்க முடிந்த அளவு)வாசலில் நிற்க வேண்டும்.அப்பொழுது தான் பஜனைக் கோஷ்டியும் நிற்பார்கள்.அவர்களின் காலில் நீர் ஊற்றி 3சுற்று அவர்களை சுற்ற வேண்டும்.பிறகு அவர்கள் தரும் துளசி இலை தான் பிரசாதம்.இவ்வாறு செய்தால் நல்ல கணவன் அமைவார் என்ற ஒரு மூடப் பழக்கம்.பெண் பிள்ளைகள் மட்டுமே இவ்வாறு செய்வதுண்டு.எங்கள் தெருவில் நான் மட்டுமே அவ்வாறு செய்திருப்பேன் என்று நினைவு.(எங்கள் அப்பா கணவரின் அமைவு குறித்த முட்டாள் தனத்தை எல்லாம் சொன்னது இல்லை.எங்கள் வீட்டில் இருந்த பெண்களின் ஆர்வமாகத் தான் இருக்கும்.வேறு எப்படி ஏமாற்றுவது?)இவ்வாறு நான் செய்விக்கப் பட்டதற்கு இன்னுமொரு காரணம்,எங்கள் அப்பாவின் தாயார் வைகுண்ட ஏகாதசி அன்று இறந்து வருடந்தோறும் ,திதி கொடுத்து,அப்பா மட்டும் திட உணவு ஏதும் உண்ணாமல்,விஷ்ணு சகஸ்ர நாமம் சொல்லி இரவு முழுதும் கோவிலில் கண் விழித்து ,மறுநாளில் துவாதசி காலையில் விரதம் முடிப்பதுடன்,பஜனையாளர்கள் 30,35
பேருக்கும் விருந்துணவு எங்கள் வீட்டில் தான் .அன்று மாலை பிள்ளையார் கோவில் பூஜைக் கான மண்டகப்படியும் எங்கள் வீட்டிலிருந்து தான்.எனவே நான் அவ்வாறான பாரம் பரியம் காக்கப் பழக்கப் படுத்தப் பட்டிருக் கலாம்.எங்கள் வீட்டில் நான் மட்டும் தான் இதனை செய்திருக்கிறேன்.என் அக்காவோ,தங்கைகளோ அவ்வாறு செய்விக்கப் படாததன்
காரணம் அவர்களின் வளர்ப்பு அவ்வாறோ என்னவோ?அது போகட்டும்.நான் 10,11வகுப்பு படிக்கும் பொழுது இச் செயல் பாடுகள் என்னால் செய்ய இயலவில்லை.மனமும் சிந்திக்க ஆரம்பித்து விட்டது.சரி,நல்ல கணவர் அமைந்தாரா?எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை;எவருடனும் பழக்கமும் இல்லை.(வளர்ப்பு அப்படி;வீட்டினரும் அப்படி.)ஆனால் என்னை வேலைக்கு அனுப்பியது மட்டுமில்லை.பிள்ளைகளுக்கு நிறைய அன்பு,கல்வி,சுதந்திரம் அனைத்தையும் கொடுத்தார்.இது போதும்.வேறு யாரேனும் என்றால் என்னை வேலைக்கு அனுப்பி இருப்பார் களோ,என்னமோ தெரியாது.என் ஏக்கம் என் பிள்ளைகள் மேற்கூறிய எங்கள் வீட்டின் நிகழ்வுகளைப் பார்க்க முடியவில்லை என்பதுதான்.இவர்கள் பிறக்கும் போது எங்கள் அப்பா உயிருடன் இல்லை.என்ன செய்வது இயற்கையை வெல்வார் யார்?

Tuesday 12 February 2013

vaazkkai nerikalum ilakkias seidhikal silavum

மணமாகி 6,7மாதங்கள் ஆன இணையருள்,அன்பு பற்றிய பேச்சு வந்தது.நான் கூறினேன்.'செம்புலப் பெயல் நீர் போல'மனமொ த் திருக்கவே ண்டும் என்று.யார் செம்புலம்?யார் பெயல் நீர்?எனக் கேட்டார் மணமகன்.தற்காலத் தவர்க்கு வாழ்வியல் நிகழ்வுகளிலேயே சந்தேகம் வரும் பொழுது இந்தச் சந்தேகமும் சரிதான் என்று மனதில் நினைத்துக் கொண்டேன்.EQUALITY தானே இன்றைய எதிர்பார்ப்பு.(பெற்றோர்க்கும் சேர்த்துத்தான்.)அப்படி இருக்கையில் யார் நிலமாய் இருப்பது,நீராய் இருப்பது.மனம்தான் ஒன்றிப் போக வேண்டும்.இல்லையா?ஐங்குறு நூற்றுப் பாடலில்,கணவனுடன் இல்லறம் நடத்தும் பெண்ணைப் பார்ப்பதற்கு,வளர்ப்புத் தாய் செல்கிறாள்.அவளிடம் அந்தப் பெண் கூறுகிறாள்.'என்பெற்றோரின் தோட்டக் கிணற்று நீர் தேனும்,பாலும் கலந்தது போன்று சுவை கொண்டது.என் கணவரின் வீட்டில் கிணறு இலைச் சருகுகள் நிறைந்து மான்கள் வாய் வைத்துக் குடித்து எஞ்சிய,கலங்கலான நீர்தான்.ஆனால் இதுதான் பெருமை யாக இருக்கிறது'என்கிறாள்.இன்றைய நிலையிலும் கூட எப்படிப் பட்டவாழ்க்கை கிடைத்தாலும் கணவனின் வீடுதான் உயர்வாகக் கருதுவது சமுதாயத்தில் ஒரு மதிப்பைத் தருகிறது.இன்றைய கால கட்டத்தில் காதல் என்ற பெயரில் பல விபரீதங்கள்,தற்கொலைகள்,கொடூரமான செயல்பாடுகள்.பெண்ணைப் பெற்றவர்கள் பயந்தே காலம் தள்ள வேண்டிய நிலை.குறிஞ்சிக் கலியில் ஒரு பாடல்.நாடகக் காட்சி போன்று.தான் விரும்பும் பெண்ணை 2,3நாட்களாகப் பார்க்க இயலவில்லை,அந்தப் பையனுக்கு.பார்க்கும் ஆவலில் வீட்டிற்குச்செல்கிறான்.உள்ளே செல்லமுடியாத வகையில் பெண்ணின் தாயும் இருக்கிறாள்.என்ன செய்வது?வாசலில் இருந்தே பருகுவதற்கு நீர் கேட்க யதார்த்தமான தாயும்,நீர் கொடுக்கச் சொல்கிறாள்,மகளிடம்.நீர்ச் சொம்புடன் கையையும் சேர்த்துப் பிடித்து விடுகிறான்.பயத்துடன் பெண் அலற,என்னவென்று உள்ளே இருந்து கேட்கும் தாய்க்கு,உண்ணுநீர் விக்கினான் என்று அவனைக் காட்டிக் கொடுக்காத அந்தப் பெண்ணைப் பார்த்து,'கொல்வான்போல் நகைக் கூட்டம் செய்தான் அக் கள்வன் மகன்'என்று பெண் கூறுவதாக அமைந்திருக்கும் அப்பாடல்.எங்கள் ஆசிரியைகள் இதனை நடத்தும் போதும் நாங்கள் இதனை மாணவர்களுக்குக் கூறும் போதும் ஒரு கற்பனைக் காட்சியாகத் தான் நினைத்து ரசித்திருக்கிறோம்.இலக்கியச் சுவைக்கு இதுபோன்ற நிகழ்வுகள் வாழ்க்கையுடன் ஒன்றி இருப்பதனைப் பார்க்க முடிகிறது.காமம் என்ற அன்பை உணர்த்தும் சொல் இன்று வேறு பொருளைத் தருகிறது.அதுபோல் வாழ்க்கை முறைகளும்,நெறிகளும் இன்றைய நிலையில் வேறு விதமாகப் புரிந்து கொள்ளப் பட்டிருப்பதும் வேதனைக் குரியது.  


Saturday 9 February 2013

islaamiyarkalin en anubavangal

சென்ற வாரங்களில் விஸ்வரூபம் படம் பற்றிய செய்திகள்;சர்ச்சைகள்.நான் பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்தே முஸ்லிம் பையன்,பெண்களுடன் பழகி இருக்கிறேன்.கல்லூரிக் காலங்களில் பெண் நண்பி இருந்திருக்கிறார்.முதுகலை வகுப்பில் ஒருவர்(பெயர் உமர் கதாப்)இருந்தார்.எல்லோரிடமும் இயல்பான நிலையில் தான் பழகி இருக்கிறோம்.இந்து,முஸ்லிம் என்ற எந்த வேறுபாடும் தெரியாது.பெயரில்மட்டும் தான் வேற்றுமை.மற்றபடிவீட்டுக்கு வருவது,பழகுவது,ஏன் பெற்றோர் கூட வேற்றுமை கற்பித்ததில்லை.ஆனால்பள்ளியில் ஒருநாள் ஆசிரியர் களாகிய நாங்கள்,'இந்தியாவின் monsester மும்பை,தமிழ்நாட்டின் monsester கோயம்புத்தூர்' என்றுசொல்லிக் கொண்டிருக்கும் பொழுது,இரண்டு இடங்களில் தான்,அடிக்கடி குண்டு வெடிப்பு நிகழும் என்று ஒரு ஆசிரியை வேடிக்கையாக நினைவு படுத்தினார்.நிகழ்த்தியவர்கள்,குறிப்பிட்ட ஒரு இயக்கம் சார்ந்தவர் களாக அல்லவா இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டேன்.அன்றாடம் பழகிக் கொண்டிருப் பவர்கள் வேறு,இவர்கள் வேறு என்று சாதாரணமாக நினைத்துக் கொள்வேன்.காந்தகார் விமானக் கடத்தல்,ஒரு தம்பதியருள் கணவனைக் கொன்றது,அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதல்,தாஜ் ஹோட்டல் தாக்குதல்,அரபு நாடுகளிலுள்ள தண்டனைச் சட்டங்கள்,சமீபத்தில் இளம்பெண்ணின் தலைத் துண்டிப்பு இவையெல்லாம் இடர்ப் பாடான ஒரு மனநிலையை என்னுள் தோற்றுவிக்கும்.மதன் எழுதிய 'வந்தார்கள் வென்றார்கள்'படித்ததன் பாதிப்பு,இப்படித் தான் போலுமிவர்களின் நீதி முறை என்று நினைத்துவிட்டு விடுவேன்.அதனால் இன்றளவும் இசுலாமிய மக்களுடன் பழக்கம் சாதாரண மாகத்தான் இருக்குமே தவிர ஒரு வேறுபாடும் தோன்றியதே இல்லை.இவ்வாறு வன்முறையில் ஈடுபடுபவர்களின் இனம் என்று சிறிதளவும் தோன்றவே தோன்றாது.அவர்களும் எந்த ஒரு மரியாதைக் குறைவாகவும் பேசியதே இல்லை.திரைப்படக் காட்சிகள் எப்படி இருக்குமோ நான் பார்க்கவில்லை.எத்தனையோ தி  ரைப் படங்கள்                 சர்ச்சைக்குரியதாக இருந்திருக்கின்றன.(அரங்கேற்றம் திரைப்படம்)படம்,பாடம் கற்பிப் பதாக அமைவதுண்டு.ரசிகர்களின் மனநிலையைப் பொறுத்துத் தான் அவை அவ்வாறு ஏற்றுக் கொள்ளப் படும்.தற்பொழுது நடக்கும் செயல்களுக்கு ஏற்ற வகையில்தான் திரைக் கதைகளும்,காட்சிகளும் அமைகின்றனவோ?என்னவோ!'இலக்கியம் காலம் காட்டும் கண்ணாடி'என்பார்கள்.இதற்கும் பொருந்துமோ?யாரோ ஓரிருவர் சில கொடூரங்களை செய்கிறார்கள் என்பதற்காக நாம் அந்த இனத்தவரையே இழிவாகப் பார்க்கிறோமா என்ன?இல்லையே!அப்படி இருக்கும் பொழுது ஏன் இந்த சர்ச்சை களும்,குழப்பமும் என்பது புரியவில்லை.இன்னும் வருங்காலங்களில் என்னென்ன வருமோ!

Wednesday 6 February 2013

balakumaranin UDAYARm andanarkalin en pazaya ninaivukalum.

பாலகுமரனின்  உடையார் 4பாகங்களைப் படித்து முடித்து விட்டேன்.அவற்றுள் பரவலாக அந்தணர்கள் குறித்த பல நிகழ்வுகள் வருகின்றன.அவற்றைப் படிக்கும் பொழுது என் சிறிய வயது நினைவுகள்....எங்கள் ஊரில் அக்ரஹாரம் இருந்தது.அந்தத் தெருவில் ஒரு 30,40குடும்பங்களும் ,20வீடுகளும் இருந்தன.மிக அமைதியாக பெயருக் கேற்றபடி இருக்கும்.வாசலில் செம்மண் கோலம்,நீளமான வீடுகள்,அவரவர் வசதிக் கேற்ற வகையில் உள் குடித்தனங்கள்,தனிவீடுகள்,ஒருசில அரசு அலுவலர்கள் (2,3,பெண்களும் அரசாங்க வேலை பார்த்தார்கள்) என்று அந்தத் தெருவுக்கே உரிய அந்தஸ்துடன் இருக்கும்.(இன்று பெயர் மட்டும்தான் இருக்கிறது.முஸ்லிம்கள் நிறைய பேர்கள் வீடுகளை remodel செய்து வசித்துக் கொண்டிருக் கிறார்கள்.அது வேறு விசயம்)என்  வகுப்பில் படித்தவர்கள் பரவலாக இருந்தனர்.அவர்களுடன் நாங்கள் வீட்டிற்குள் போக அனுமதிக்க மாட்டார்கள்.நாங்கள் சூத்திரவாளாம்.(அவர்கள் மொழியில் என்ன பொருளோ?)பிறகு ,அவர்கள் பிள்ளைகள் பள்ளி விட்டு வந்ததும் ஒரு முற்றம் போன்ற இடத்தில் குளித்து உடை மாற்றினால் தான் உள்ளே அனுமதிப்பார்கள்.நவராத்திரி நேரத்தில் கொலு வைத்திருப் பார்களே!சிறுவர்,சிறுமி களாகிய நாங்கள் வெளியில் நின்றுதான்,ஜன்னல் வழியாகப் பார்த்து விட்டு வருவோம்.எங்கள் வீடுகளில் கொலுவெல்லாம் வைப்பது பழக்கம் இல்லையே!அதுவுமல்லாமல் எங்களுக்கு ஒரு entertainment ம் கூட!அப்புறம் ஆற்றுக்குக் குளிக்கப் போகும் பொழுது,குளித்து விட்டுவரும் சில வயதான முக்காடிட்ட பாட்டிகள்,'தள்ளிக் கோடி' என்று எச்சரிக்கை ஒலியுடன் வருவார்கள்.குளிக்காத நாங்கள் அவர்கள் மேல் லேசாகப் பட்டு விட்டாலும் தீட்டாம்.இன்னும் பழைய காலத்தில் அவர்கள் இருக்கும் தெருவில் செருப்போ,மேல் சட்டையோ போட்டுக் கொண்டு போகக் கூடாதாம்.சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன்.எங்கள் ஊரின் taluk கத் தலை நகரில் ஒரு பஸ் கம்பெனி இருந்தது.அதில் மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் பிற இனத்தவர் ஆகவும்,இருக்கையில் அமர்ந்து கணக்குகளைப் பார்ப்பவர்கள் அவர்களாகவும் இருப்பார்கள் என்றும்,கல்லூரியில் இரு பானைகளில் குடிநீர் வைத்திருப் பார்கள் என்று தன் நேரடி அனுபவமாக,என் முதுகலை வகுப்பு ஆசிரியரால் சொல்லக் கேட்டிருக்கிறோமே!அது மட்டுமல்ல.எங்கள் அப்பா எங்களை சிறு வயதில் காபி கிளப் க்கு அழைத்து செல்லும் பொழுது,'இது பிராமிணர்கள் சாப்பிடும் இடம்'என்று எழுதி இருப்பதைப் பார்த்து நாங்கள் வேறு மாதிரியாக உச்சரித்து சிரிப்போம்.பாலகுமாரன்,தன் நாவலில் முன் குடுமி வைத்த அந்தணர்களைப் பற்றியும் குறிப்பிட்டிருப்பார்.கேரளா வுக்குச் சென்றால் அவர்களின் பழம் சரித்திரக் கதையைக் கூறுவார்களோ,என்னமோ?என் பையன் புலியூர்க் குறிச்சியில் தங்கிப் படித்தபோது ஒருசில,அவர்களின் குண அதிசயங்களைக் கூறியிருக்கிறான்.ஒரு முறை எங்கள் ஊரில் ஒரு மாட்டு வண்டி ஊர்வலம் நடந்தது.அதில் ராமர்கடவுள் போன்று வேறு சில கடவுளர்களின் வேடமிட்டு கழுத்தில் செருப்பு மாலையுடன் சென்றனர்.விவரம் புரியாத வயதில் எனக்கு,அது இனம் புரியாத உணர்வாக இருந்தது.இன்று காலம் எத்தனை மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது! ஒன்றை சொல்லியாக வேண்டுமே! நான் P.G.படிக்கும் பொழுது என்னுடன் படித்த இன்னொரு பெண்.அவளது வீட்டிற்கு உள்ளே சென்று சாப்பிடவெல்லாம் செய்திருக்கிறேன்.அவளும் எங்கள் வீட்டில் சாப்பிட்டிருக்கிறாள்.ஆனால் அவர்கள் வசித்தது ஒரு ஒண்டுக் குடித்தனம்.

Tuesday 5 February 2013

FIAT KAARUM EN KANAVARUM


பண்ணையாரும் பத்மினியும் குறும் படத்தை சினிமா ஆக்கப் போகிறார்களாம்.அது என்னபடம்?!எங்கள் வீட்டில் இருக்குதே ஒரு பியட்.மாடல் M D O 8064.அதன் வருடத்தை சொல்லத் தேவை இல்லை.அந்த காருக்கு ஹீரோ என் கணவர்.என் கணவருக்கு heroine,தர்மபத்தினி எல்லாமே அந்தக் கார்தான்.இப்படிச் சொல்றதுனாலே புதுக் காரா அப்போ வாங்கி இருப்பாரோ என்று பெருமையா நினைத்தீங்கன்னா நான் பொறுப் பில்லை.அந்தக் கார் owner 30 வருஷம் அதை ஓட்டி வெறுத்துப் போய் வித்துட்டுப் போனதை இவர் ஒரு புரோக்கர் மூலமா வாங்கிகிட்டு வந்து பெருமை பீத்திக் கிட்டார்.
அப்போ என்பெண் 11ஆம்வகுப்பும் ,பையன் 8ஆம் வகுப்பும் படிச்சிட்டு இருந்ததாலே அவங்க ஒண்ணும் பேசலை.அப்பாவை எதிர்த்துப் பேசும் அளவுக்குஅவங்க இல்லை.எனக்கு அந்தக் காரைப் பார்த்து வெறுப்பு ஒரு பக்கம்,இந்த மனிதர் இப்படித் தான் தோன்றித் தனமாகச்செயல் படுகிறாரே என்ற கோபம் ஒருபக்கம்.அது கிடக்க.அந்தக் காரில் எங்கள் குடும்பம் போனது என்பதை விட நாங்கள் நால்வரும் அந்தக் காரைத் தள்ளி இருப்பது தான் அதிகம். 
இன்றளவும் அந்தக் காரைக் குறித்து கேலி பேசாதவர்கள் கிடையாது.எங்கள் தெருவில் வயதான முஸ்லிம் அன்பர் ஒருவர் அந்தக் காருடன் போராடுகின்ற எங்களிடம் அனுதாபப் பட்டு ,இந்தக் காரை விற்று விடுங்கள் சார்.இதுபோன்றொரு பழைய மாடல் க்கு இப்படிச் செலவு செய்கிறீர்களே என்று கூறிப் பார்த்தார்.ஊஹூம்....அவரின் காலம் முடிந்து அவர்தான் இறந்து விட்டார்.பக்கத்து வீட்டில் ஒரு பாட்டி கை,கால் முடியாதவர்.அவரும்,சார் ஏன் இந்தக் காரை வைத்துக் கொண்டு சிரமப்பட வேண்டும்?என்று கூறி என் கணவரின் கோபத்திற்கு ஆளானது தான் மிச்சம்.
ஒரு முறைபழைய பேப்பர் காரர்,வழக்கமாக வருபவர் ,இந்தக்காரை 16000ரூபாய்க்கு நான் எடுத்துக் கொள்கிறேன்.அதில் உள்ள parts அந்த மதிப்புக்குத் தான் இருக்கும்.என்று யதார்த்தமாகக் கூறினார்.அவ்வளவு திட்டு அந்த பேப்பர் காரருக்கு.அதிலிருந்து என் கணவர் இல்லாத நேரம் பார்த்துத்தான் பழைய பேப்பர் காரரையே கூப்பிடுவது.இந்தக்காரை எடுத்துக் கொண்டு தான் ஏர்போர்ட் க்குப் போக வேண்டுமா என்று அதை ரிப்பேர் பார்க்கும் mechcanic கூட ஒரு முறை திட்டி அனுப்பி இருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் அவரைக் கூட எவ்வளவு வெறுப்பேற்றி இருக்கிறது என்று.
பழைய மாடல் கார் exhibition வைப்பார்களே அதற்கு அனுப்பலாமோ?ஆனால் என் கணவர் அதையும் ஒத்துக் கொள்ளமாட்டார்.இப்பொழுதும் இதை 2லட்சத்துக்குக் கேட்கிறார்கள் கேக்குறாங்க ,குடுத்துடவா என்று மிரட்டுவார்.நான் பேசாமல் இருந்துடுவேன்.ஏன்னா வேற ஏதாவது விளைவு அல்லது என் பெண் புதியதாக வாங்கிய ஸ்விப்ட் பெட்ரோல் ல் காஸ் பயன் படுத்தி ஓட்ட ஆரம்பித்து விட்டால் என்ன செய்வது?இப்படிஎல்லாம் சொல்வதனால் பியட் எதற்கும் பயன்பட வில்லையோ என்று ஐயுற வேண்டாம்.இதற்கு நான் விளக்கம் சொல்வதை விட அதில் நாங்கள் பயணிக்கும் பொழுது என் கணவரின் முகத்துப் பெருமிதத்தை பார்ப்பதுதான் பொருத்தமாக இருக்கும்.என் பையன் ஓட்ட அவர் பக்கத்தில் உட்கார்ந்து வர...தேர் பவனி தோற்றுப் போகும்.ரொம்ப ஸ்பீட் போகாதாமில்லே.என் பையன்தான் சொன்னான்.வேற எதாவது கார்லே போகக் கூடிய சந்தர்ப் பத்தில், நல்ல காராகவே இருந்தாலும் , நம்ம பியட் மாதிரி வருமா என்று புளகாங்கிதப்பட்டுக் கொள்ளும் என் கணவரின் பெருமிதமான மனம்...கீழ் வீட்டில் குடி வந்திருக்கும் இளைஞர் களிடம்.இந்தக் காரில்தான் என் பெண்ணும் பையனும் கார் ஓட்டக் கற்றுக் கொண்டார்கள் என்று என் பங்குக்கு நான் பெருமைப் பட அவர்கள் இதில் வேறு என்ன செய்ய முடியும் என்று ஒரே வார்த்தையில் பாராட்டினார்களே!
வாசலில் தளிர் வரும் முருங்கைக்கு ஒரு பக்க மறைவாக, மாடு வாய் வைக்காமல் இருக்க ஒரு பக்கக் காவலாய் கண கம்பீரமாய் நின்று கொண்டிருக்கும் எங்கள் பியட் இன் பெருமையைப் படமாக எடுக்க பார்ட் 1, பார்ட் 2 என்றல்லவா எடுக்க வேண்டும்.

Monday 4 February 2013

நான் சிறு வயதாக இருக்கும் பொழுது மாவு மில்லுக்குப் போவேன்.அப்பொழுதும் யாரேனும் என் வயதொத்த நண்பன் அல்லது நண்பி கூட வருவதுண்டு.கொஞ்சம் தூரத்தில் மில் இருக்கும்.அதனால் ஏதும் வாங்கித்தின்று கொண்டு போவோம்.அது ஜாலி யான ஒரு குட்டி பிக்னிக் போல.அந்த மில்லுக்கு எதிரில் ஒரு பெரிய பங்களா இருக்கும்.அந்தக் காலத்தில் எங்கள் ஊரில் அதுதான் பங்களா.ரொம்பப் பெரிய கட்டிடம்.சுற்றிலும் இடம் விட்டு தற் காலத்தில் உள்ள கலெக்டர் பங்களா போல் இருக்கும்.அது எம்.ஆர்.ராதாவின் பங்களா என்று எங்களுக்கு கூறப் பட்டிருந்தது.நாங்கள் போகும் பொழுதெல்லாம் எம்.ஆர்.ராதா.வருவாரா என்று ஆவலுடன் பார்ப்போம்.ஆனால் ஒருநாள் கூட பார்த்ததில்லை.உயரமாகக் கொண்டை போட்ட ஒரு அம்மாளைத்தான் பார்த்திருக்கிறேன்.அந்தப் பங்களா இன்றும் இருக்கிறது அறிவு தெரிந்ததன் பிறகுதான் எம்.ஆர்.ராதா குறித்தும் ஊருக்கு ஒரு பங்களா என்பது குறித்தும்,இன்ன பிற செய்திகளையும் அறிந்து கொண்டேன்.இப்பொழுது நினைத்தாலும் அறியா வயதின் ஆச்சரியமும் அறிந்த வயதின் சிரிப்பும் வேடிக்கைதான்..

parents vs children

நேற்று  நீயா?நானா?விவாத மேடை.பிள்ளைகள் vs பெற்றோர்கள்.கணேஷ் சிறு வயதில் எப்பொழுது கடைக்குக் கூட்டிக் கொண்டு போனாலும் கார் பொம்மை மட்டும் தான் கேட்டு அழுவான்.ஆம்.அடம் பிடித்து அழுவான்.அழுவான் என்பதை அடிக்கோடிட்டுக் கொள்ளவும்.ஒருமுறை உங்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு ராஜராஜன் theatre க்குச் சென்றேன்.அப்பொழுது highways ஆபீஸ் ல் என்னுடன் வேலை பார்த்த மோகனாவும் வந்தார்.சாப்பாடெல்லாம் எடுத்துக்கொண்டு அரை நாள் ஆபீஸ் ல் இருந்துவிட்டு theatre ல் வெளியில் வைத்து சாப்பிட்டு விட்டு படம் பார்த்து விட்டு வந்தோம்.என்ன படம் என்று நினைவில் இல்லை.கணேஷ் ஒழுங்காகப் படம் பார்க்க மாட்டான்.அன்று.எப்படி படம் பார்த்தான் என்பதும் நினைவில்லை.ஆனால் thatre லிருந்து படம் முடிந்து வெளியில் வந்ததிலிருந்து busstand வரும்வரை கார் பொம்மை கேட்டு அழுது கொண்டே வந்தான்.எனக்கு கோபமான கோபம்.வந்தால் வா இல்லையென்றால் போடா என்று அவனை விடவும் முடியாது.கையைப் பிடித்து இழுத்துக் கொண்டுதான் busstand வந்து சேர்ந்தேன்.ரம்யா இதில் தனக்கு எந்த சம்பந்தமும் இல்லாது போல அமைதியாக வருவாள்.கணேஷ்க்கு இந்த கார் பைத்தியம் அவன் 9ஆம் வகுப்பு படிக்கும் பொழுது நிஜக் கார் ஓட்டினதன் பிறகு தான் தெளிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

Sunday 3 February 2013

markazi half yearly exam

நான் 6,7ஆம் வகுப்பு படிக்கும் பொழுது என்று நினைக்கிறேன்.எங்கள் அப்பா அதி காலையில் எழுப்பி படிக்கச் சொல்வார்.ஏன்னா மார்கழியும் half yearly எக்ஸாம் உம் ஒன்னா வர்ற நேரமும் அப்பதான்.எழுந்துகிறதுக்கு சோம்பலாகவும் குளிராகவும் இருக்கும்.ஆனா எழுந்திரிச்சி பல் தேய்ச்சி கொஞ்ச நேரம் படிக்கிறா மாதிரி படிச்சிட்டு ஆற்றுக்கு குளிக்க கிளம்பிடுவோம்.போற வழியிலே தான் முனியாண்டி கோவில் இருக்கு.6மணிக்குள்ளே கோவிலுக்குப் போயிட்டோம் ன்னா சூடா வெண்பொங்கல் தருவாங்க.அதை வாங்குறதுக்கு தான் சீக்கிரமே எழுந்திருக்கிற டிராமா ல்லாம்.இன்னொன்னு சூரியன் வர்றதுக்கு முன்னாடி ஆற்றுநீர் சூடா இருக்கும்.இந்த பொங்கல் வாங்குற ஐடியா ல்லாம் பக்கத்து வீட்டு ராஜுவும் எனக்கு ஒரு அண்ணன் இருக்காரே இவங்க 2பேரும் தர்றதுதான்.அந்தக் கோவிலில் தான் திருப்பாவை,திருவெம்பாவைப் பாடல்கள் ஒலிக்கும்.இப்பொழுதும் கோவில் இருக்கிறது.ஆனால் பொங்கல் வாங்க எங்களைப் போன்றவர்கள் இருக்கிறார்களோ இல்லையோ?என்ன பாடல்கள் போடுகிறார்களோ!ஏன்னா இப்ப யாரும் ஆற்றுக்குப் போய் குளிப்பதே இல்லையே!ஆறே பாழ்பட்டுக் கிடக்கிறது.ஆறில்லா ஊருக்கு அழகு பாழ் என்பார்கள்.அந்த ஆறே இன்னைக்கு பாழ்பட்டுக் கிடக்கிறது.நல்லபல வழக் கங்களை யும் எனக்கு எங்கள் ஊர்தான் கற்றுக் கொடுத்தது என்பதை நான் பெருமை யாக சொல்லிக் கொள்ளத் தான் வேண்டும்.

Saturday 2 February 2013

இன்ஜினியரிங் படித்த பெண்கள் ரொம்ப ராங்கி பிடித்தவர்களாக இருப்பார்களோ என்று  எனக்குத் தோன்றும்.பையன்கள் அப்படி இல்லை.என்னமோ இங்கிலிஷ்ல் பேசிக் கொள்வதும் மற்றவர்களுக்கு ஒன்றுமே தெரியாது என்கிற பாவனையில் நடந்து கொள்ளும் மிடுக்கும் அவர்களிடம் சாதாரணமாகப் பேசலாம் என்ற மனோபாவத்தைத் தகர்த்து விடும்.என் பெண் கூட அவளுக்கு அம்மா என்பதனால் தான் என்னுடன் சேர்ந்து வருகிறாளோ என்று கூட நான் நினைத்துக் கொள்வேன்.ஒருமுறை நான்பணி முடிந்து,என்பெண் கல்லூரி முடிந்து டவுன்பஸ் க்காகக் காத்திருந்தோம்.அப்பொழுது என்கையில் காய்கறி கொண்ட துணிப்பை இருந்தது.நான் துணிப்பை வைத்திருக்கிறேன்.அதனால் உனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லையே?என்று கேட்கும் அளவுக்கு என் மனதில் ஒரு காம்ப்ளக்ஸ்.ஒரு முறை நான் busstand ல் நின்று கொண்டிருந்தேன்.எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வருகின்ற என் பெண்ணின் நண்பி என்னைப் பார்த்தும் தெரியாதவள் போல சென்று விட்டாள்.அதனால் இப்பொழுதும் எந்தப் பெண்ணிடம் பேச வேண்டும் என்றாலும் பார்த்துத்தான் பேசவேண்டி இருக்கிறது.என் குணம் பொதுவாக பிறரின் சுபாவம் அறிந்து பேசுதல்.அப்படி என்பதனால்தான் இப்படி நினைத்துக் கொள்கிறேனோ என்னவோ!

Friday 1 February 2013

இல்லை கணேஷ்!இப்படி நான் பார்த்ததே இல்லை.வேறு முறையில் சொல்வார் களே தவிர கதைப் பகுதியில் இவ்வாறு செய்ய மாட்டார்கள்.இது கதை ஆசிரியருக்கும் இழுக்கு.அத்துடன் இந்தக் கதை ஆசிரியரும் பிரபலமானவர்.