Tuesday, 5 March 2013

paarvaikalil konangalum konalkalum

                                 
கல்லூரிப் படிப்பில் கண்ணப்ப நாயனார் பற்றிப் படித்திருக்கிறோம்.இன்ன கொள்கைகள்,என்பது தெரியாமலே கடவுளிடம் வெறித்தனமான அன்பு கொண்டவர்.செருப்புக் காலால் இறைவனின் கண்ணை அடையாளம் கொண்டும்,மாமிச உணவினை படைத்தும் சிவனிடம் ஐக்கியமானவர்.சிலர் இது போன்றே குருட்டுத் தனமாக செயல் படுவர்.ஆனால் அது நன்மையில் முடிந்திருக்கும்.சமீபத்தில் என் கணவர் ஒரு மின் அடுப்பு வாங்கினார்.அது எனக்குப் பழக்கமில்லை.அத்துடன் காஸ் cylindor தீர்ந்ததும் அவருடைய முட்டாள் தனத்தினால் தான்.எப்படியும்மின் அடுப்பில் சமையல் செய்ய வேண்டிய கட்டாயத்தின் பேரில் அதனைக் கற்றுக் கொண்டேன்.இன்று அந்த அடுப்பு சமையலுக்கு எளிதாக இருக்கிறது.என் பெண்ணுக்கு ஒன்று வாங்க கணவரிடம் சிபாரிசு செய்கிறேன்.{திட்டுவது தொடர்கிறது.அது வேறு விஷயம்.}ஒரு 12 வருடங்களுக்கு முன் மிகக் குறைந்த விலையில் 2 பிளாட் வாங்கினார்.இருக்கும் கொஞ்ச நகைகளையும் அடகு வைத்து பிடிவாதமாக வாங்கினார்.வீட்டில் இருக்கும் நிலை குறித்த எந்த பயமும்,எப்பொழுதும் அவருக்கு கிடையாது.அந்தக் காட்டில் போய் வாங்குகிறாரே என்று எனக்குத் தான் குழப்பம்.10வருடங்களுக்குப்பிறகு என் பெண்ணுக்குக் கல்விக்கடன் வாங்கும் பொழுதுதான் அதன் அருமை தெரிந்தது.இன்றைய நிலையில் அதனைச் சுற்றிலும் வீடுகள்.கீழ் வீட்டில் இருப்பவர் களிடம் வாடகையைக் கூட்டிக் கேட்டார்.இருக்கிற வாடகையும் போய்விடப் போகிறதே என்று நான் பயந்தது போலவே அவர்கள் வீட்டைக் காலி பண்ணி விட்டார்கள்.என்னைப் பார்த்துப் பேசவே தயங்கிக் கொண்டிருந்த அவருக்கு 10நாட்களில் அவர் கேட்டதை விட 1.5மடங்கு அதிக வாடகைக்கு ஆள் வந்து,நான்தான் வாயடக்கிக் கொள்ள வேண்டி வந்தது.உனக்குப் 10 வருடமாவது teaching post கிடைக்கும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.இருக்கிற வேலைக்கு வேட்டு வராமலிருந்தால் சரி என்று அலட்சியப் படுத்துவேன்.14 வருடங்கள் ஆசிரியப் பணியாற்றினேன்.என் பெண்ணின் பயோ படிப்பு குறித்து தெரிந்தது போல் பேசிக் கொண்டே இருப்பார்.நாங்கள் அவரை ஓட்டுவோம்.ஆனால்,இன்று.......இப்பொழுது என் பையனுக்கான வேலை குறித்து சொல்லிக் கொண்டே இருக்கிறார்.நானும் செண்டிமெண்டாக மனதுக்குள் நினைத்துக் கொள்கிறேன்.ஆனால் அவரைத் திட்டிக் கொண்டுதான் இருக்கிறேன்.[நை ....நை ...என்று விடமாட்டீர்களா!]ஒரு முக்கியமான நிகழ்ச்சியை சொல்லியே ஆக வேண்டும்.என் பையன் U.K.G.படிக்கும் பொழுது பரமக்குடியில் ஒரு திருமணத் திற்கு சென்ற நாங்கள்,ராமேஸ்வரம் சென்று வர எண்ணி busstandl ல்  நின்று கொண்டு இருந்தோம்.பஸ் எங்கே நிற்கும் என்று தெரிந்து வர அவர் சென்றார்.நான் 2பேரையும் ,laggage உடன் சேர்த்துப் பார்த்துக் கொண்டு நின்றேன்.பின்னால்,அருகில் உள்ள பாத்ரூம் க்குச் சென்ற என் பெண்ணுக்கு உதவ சென்ற 2நிமிடங்களுக்குள்,என்னைக் காணாமல்,தேடிக்கொண்டு,என் பையன் எங்கோ ஓடி விட்டான்.வெளியில் வந்து பார்த்த எனக்கு,என்ன செய்வது என்றே தெரியவில்லை.பயம்,laggagejai வைத்துவிட்டு,என் பெண்ணைப் பிடித்துக் கொண்டு பக்கத்தில் உள்ள கடைகளில் தேடுகிறேன்;எங்கும் அவனில்லை.இப்பொழுதும் மனம் பதறுகின்றது என்றால்,அப்பொழுது என் நிலையை நான் எப்படி உணர்த்துவேன்?திடீரென்று,சினிமா கதா நாயகன் போல் வந்தவர் [என் கணவர் தான்]விடுவிடு என busstand க்கு எதிர் புறம் சென்றவர்,மீன்கூடைக் கார அம்மாவிடம் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்று கொண்டு இருக்கிறான்;அழாமல் இருக்கிறான்;மேலும் வேடிக்கை வேறு இவனுக்கு என்று கூட்டிக் கொண்டு வந்தாரே பார்க்கலாம்!அப்பாடா....நல்ல நேரம்.இவ்வாறான பல செயல்பாடுகள் அவருடையன!ஒருவேளை இவருக்கு என்றே சில அமைப்போ?[என்னைக் கல்யாணம் பண்ணிகிட்டதே அவருக்கு ஒரு குருட்டு அதிர்ஷ்டம் தானே!]அவருடைய அணுகுமுறைகள் நம் பார்வையில் கோணல்!ஆனால் அவருடைய கோணம் அப்படித்தானோ என்னவோ?33வருட வாழ்க்கையில் நானே இன்னும் தடுமாறுகிறேன்.இதுபோல்உலகில் என்னென்ன நிகழ்கின்றதோ?எங்கள் ஊரின் நகரப் பகுதியில் ஒருவர்,கடைத் தெருவில் சுற்றிக் கொண்டிருப்பார்.உடலில் ஒரு துணியும் இருக்காது.நான் கொஞ்சம் வளர்ந்து,அறிவு தெரிந்த பருவத்தில்,வீட்டுப் பெரியவர் களிடம் அவரைக் குறித்து,கேலி செய்தால்,என்னைக் கண்டிப்பதுடன்,அவரை உயர்வாகவும் கூறுவார்கள்.பெரிய ஹோட்டல் களில் அவருக்குத் தான் முதலில் உண்ணக் கொடுப்பார்களாம்;பிறகுதான் வியாபாரமே ஆரம்பிப்பார்களாம்.அப்படி செய்தால் வியாபாரம் நன்றாக நடக்கும் என்று நம்பியது ஒருபுறம் இருந்தாலும்,அவ்வாறே நடந்துமிருக் கின்றதே!அவராக எங்கும் போய் கேட்கக் கூட மாட்டாராம்!இன்றும் வட மாநிலங்களில் மூன்றாம் பாலினத் தவரைப் பார்த்து செல்லும் காரியம் வெற்றி அடையும் என்று நம்புவார்களாம்.என் பெண் கூட கல்லூரித் தேர்வுக்கு செல்லும் வழியில் இருக்கும் 3ஆம் பாலின ஒருவரைப் பார்த்தால் வினாத்தாள் எளிமையாக இருக்கும் என்பார்கள் என்று கூறுவாள்.உண்மையா என்ற ஆராய்ச்சி யில் இறங்காமல் அதனதன் இயல்பில் வாழ்ந்து விட வேண்டியது தான்.


2 comments:

  1. @Ganesh: Olunga nikaama Meen vikratha enna vedikkai vendiruku unaku ???
    - Priya

    ReplyDelete