Friday, 15 March 2013

puliyanthoppu

எங்கள் ஊரின் வீட்டுக் கொல்லைப் புறம் பெரிய புளியந்தோப்பு இருந்தது.பெரிய என்றால் ரொம்பவே பெரிய்.......யது.அந்தத் தோப்புக்குள் தான் பெரிய,வரலாற்று சிறப்பு மிக்க,கலைநயம் நிரம்பிய கோவிலும் உண்டு.தோப்புதான் 35வருடத்துக்கு முந்திய பப்ளிக் toilet.இன்றைய கோவில் சுற்றுப் புறத்தைப் பார்த்தால் நம்பமாட்டார்கள்.அத்துடன் அருவருப்பாகவும் உணர்வார்கள்.தொல்பொருள் துறை கட்டுப் பாட்டின் கீழ் வந்த இத்தனைக் காலங்களில் எவ்வளவோ மாற்றங்கள்!ம்...அது இருக்கட்டும்.தோப்பாக இருந்த பொழுது புளியமரங்கள் காய்க்கத் தொடங்கி பழங்கள் உதிர்ப்பு வரையிலும் வருடந்தோறும் குறிப்பிட்ட ஒருவரே குத்தகைக்கு எடுப்பார்.நிறைய கெடுபிடி;ஒரு பழம் கூட தெரியாமல் பொறுக்கி விட முடியாது.நல்ல வெயில் காலம் வேறு.நிழல் தேடி ஒதுங்கவும் முடியாது.[ஜப்பானில் இருக்கும் சொகுசு toilet ஆ?]என் அண்ணன் திருமணத்தின் பின் அண்ணியை காரணமாக்கித் தான் எங்கள் அப்பா toilet கட்டினார்.இப்படியான ஒரு நாளில் என் தம்பி பழம் பொறுக்கினானா அல்லது மரத்தடியில் ஒதுங்கினானா தெரியவில்லை.அந்த குத்தகை ஆள் பேசுவதைக் காது கொடுத்துக் கேட்க முடியாது.அவ்வளவு மோசம்.அவன் மனைவி அதற்கும் மேல்.ஒரு பெரிய கொட்டகை போட்டுக் காவல் இருப்பது,பழம் சேகரிப்பது எல்லாம்.அந்தக் கொட்டகையில் தம்பியைக் கட்டிப் போட்டு விட்டார்.ரொம்ப சின்னப் பையன் வேறா?மிரட்டி வைத்துக் கொண்டிருக் கிறார்.அரை மணி கழித்துத் தான் எங்களுக்கு செய்தியே வருகிறது.பிறகு கெஞ்சிக் கூத்தாடி கூட்டி வந்தோம்.நாங்கள் சிறு வயதிலிருந்தே எப்படியெல்லாம்,எதற்கெல்லாம் போராடி இருக்கிறோம்!வாழ்க்கையை எளிமையாக எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பதற்கு இது ஒரு சான்று.அவ்வளவே.அதே புளியந்தோப்பில் ஆடி மாத ஏகாதசியில் ஊஞ்சல் கட்டி,பெண்கள் விளையாடியும் இருக்கிறோமே!இன்று தோப்பே இல்லை.


2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. எனக்கும் அந்தத் தோப்பில் பிரேமா சித்தியுடன் ஊஞ்சல் ஆடிய நினைவு இருக்கிறது :) ஆனால் மாமாவிற்கு நடந்த கதை தெரியாமல் போயிற்றே.... அடடே!!

    ReplyDelete