Thursday 12 September 2013

thai and thaimai[mother andmotherhood]

நான் அலுவல கத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சமயம் .1995.இங்கிலாந்து இளவரசி டயானா இறந்த சமயம்.எனக்கும் ,அலுவலகக் கண்காணிப் பாளருக்கும் தாய்மை குறித்துப் பேச்சு.இதே இளவரசி தாய்மை உணர்வுடன் இருந்திருந்தால் இரண்டு பிள்ளைகளை விட்டுப் போயிருக்க மாட்டாள்.நம் இந்தியத் தாய் இப்படி செய்திருக்க மாட்டாள் என்ற ரீதியில் பேசினோம்.தாய் வேறு,தாய்மை உணர்வு வேறு ;பெற்ற தாயாக இல்லாவிடினும் பிள்ளைகளைப் பேணுகின்ற [தன் பிள்ளைகளுக்கு செய்வதனைப் போன்றே ]கடமைகளை செய்கின்றவர் இருக்கின்றனர்.பெற்ற தாயாக இருந்தாலும் பிள்ளைகளைப் புறக்கணிக்கின் ரவர்களும் உண்டு.என் பெண் பிறந்திருந்த நேரம்;நான் அம்மா வீட்டில் இருந்தேன்.பத்தியக் குழம்பு வைத்தி ருந்தார்கள் ,கணவருக்குப் பிடிக்குமே என்றதனால் அம்மாவிடம் சொல்லி அவர்கள் வீட்டிற்குக் கொடுத்தனுப்பினோம் [2முட்டைகளும் போட்டு]மாலையில் எங்கள் வீட்டிற்கு வந்த கணவரிடம் ,குழம்புச்சுவை குறித்துக் கேட்டோம்.அப்படி ஒரு விசயமே அவருக்குத் தெரியப் படுத்தப் படவில்லை.அனைத்தையும் என் மாமியாரே சாப்பிட்டு விட்டிருக்கிறார் என்பது 2நாளைக்குப் பிறகு எங்களுக்குத் தெரிய வந்தது.'கிடைக்கும் பிடி சோறும் தனக்கென உண்ணாது கொடுக்கின்ற கோவிலது'என்றும்' ',நாளெல்லாம் பட்டினியாய் இருந்திடுவாள்;ஒரு நாழிகை நம் பசி பொறுக்க மாட்டாள்'என்றெல்லாம் பாடிய கவிஞர் களை நினைக்கத் தோன்றுகிற தல்லவா?தாய்மை உணர்வு இப்படிச் செய்திருக்காதல்லவா?திரு.வீ.க.தன் 'பெண்மை'எனும் கட்டுரையில் எழுதுவார் 'தெய்வம் என்று எங்கே ஓடுகிறீர் ;தியாக உணர்வுடன் இருக்கும் பெண்ணே தெய்வம் 'என்று. எனவே பெற்ற பிள்ளைகளின் இன்பம் தான் தன் இன்பம் என்று டயானா நினைத்திருந்தால் இறந்திருக்க வாய்ப்பில்லையே!இவ்வாறு சுய நலத்துடன் இருக்கும் தாயிடம் வளரும் பிள்ளைகள் பின்னாளில் பிறரது இன்ப துன்பங்களை அறியும் தன்மை யற்றுத் தானே வளர்கிறார்கள்!எனவே,தாய் என்பவள் தாய்மை உணர்வுடன் இருத்தல் அவசியம்.இல்லையெனில் பிற் காலத்தில் பிள்ளைகளால் வெறுப்புக்கு ஆளாவது கண்கூடு!

No comments:

Post a Comment