சமீபத்தில் 2வது முறை ஆதலினால் காதல் செய்வீர் திரைப்படத்தை பார்க்க நேரிட்டது.திருமணத் துக்கு முன் பெண் கருவுருவுவது இரண்டொரு நேரடி சம்பவங்களை கேள்விப் பட்டிருக்கிறேன்.அவர்கள் படிப்பறிவு இல்லாதவர்கள்.பெற்றோர்கள் வீதிக்கு வந்து அசிங்கப் படுத்தாமல்,அசிங்கப்படாமல் உரியவர்களுக்கே திருமணம் செய்த துண்டு.அவர்கள் இனத்தில் வேறு பட்டவர்கள் இல்லை.திரைப் படத்தில் கூறுவதுபோல் ஆசீர்வாதப் பிரட்சனை எல்லாம் வந்ததும் இல்லை.ஜாதகம்,ஜோசியம் என்ற எந்த இடையூறும் இருந்ததில்லை.நன்றாகத் தான் அவர்களின் வாழ்க்கையும் போய்க் கொண்டிருக் கிறது.அந்தத் திரைப் படக் குழந்தையை நினைத்துத் தான் நான் வருத்தப் பட்டேன்.புரிந்து கொள்ளும் , மன சாட்சி உடைய பெற்றோர்கள் இப்படியான இழி நிலையை உருவாக்காமல் இருக்கும்பட்சத்தில் ,உணர்ச்சி வசப்பட்டு தவறு செய்யும் இளம் பருவத்தினரை வாழ்வித்து நல்ல சமுதாயத்தை வுருவாக்கலாமே!
No comments:
Post a Comment