Saturday 24 January 2015

மாதொருபாகன் நாவலுக்கான சர்ச்சை ஒரு புறமிருக்கட்டும்.அந்த நாவலில் வரும் குறிப்பிடத் தக்க வரிகள் ஒரு வார இதழில் வந்திருந்தது.நாவல் ஆசிரியர் குறிப்பி ட் டிருப் பது போல் நடந் திருக்குமா ,இவ்வளவு வெளிப் படையாக எழுதப் பட்டிருக் கிறதே என்று வருந்தினேன்.சமீபத்தில் அம்மா வந்தாள் என்ற நாவலை,  வெகு நாட்களாகத் தேடி கிடைத்த மகிழ்வில் படித்தேன்.இப்படி எல்லாமா பெண்கள்,அதுவும் அம்மா இருப்பாளா என்று மனம் வெதும்பினேன் .அதுவும் உயரினத்தை சேர்ந்தவள் வேறு. ஆசிரியர் தான் நேரில் பார்த்த பெண்களின் வாழ்க்கை என்று வேறு எழுதி இருந்தார்.எனக்கு  வெறுப்பாகி விட்டது.மறைந்த சுஜாதா   அவர்கள் ஸ்ரீரங்கத்து தேவதைகள் என்று எழுதினார்.நான் படித்த தில்லை.அது எப்படி இருக்குமோ?  

No comments:

Post a Comment