Monday, 21 January 2013

நான் தமிழில் முது கலைப்பட்டமும் ஆசிரியப் பயிற்சி யில் முதுகலைப்பட்டமும் பெற்று பதினான்கு ஆண்டுகள் நெடுஞ் சாலைத் துறையில் பணியாற்றி பின்னர் முதுகலை ஆசிரியப் பணிக்கு அரசுப் பள்ளியில் சேர்ந்தேன் .புதியதாக சிலப்பதிகாரம் ஒரு செய்யுள் பகுதி எடுக்க வேண்டிய நிலையில் நாளங்காடி,அல்லங்காடி,சதுக்கபூதங்களைக் குறித்து விளக்கும் பொழுது ,ஒரு மாணவி எழுந்து ,தப்பு செய்த கோவலனை அந்த  பூதம் ஏன் கொல்லவில்லை என்று கேட்டாள் .எதிர் பாராத இந்த கேள்வியால் ஒரு நிமிட தடுமாற்றம் என்றாலும் ஊழ் வினை உறுத்து வந்து ஊட்டும் என்ற உண்மையின்படி அவன் கொல்லப்பட வேண்டும் என்பதனால்தான் இளங்கோவடிகள் அவனைக் கொல்லாமல் கதாநாயகனைக் கதையுடன் கொண்டு சென்றார் என்று கூறி சமாளித்த என் மூளையை நானே பாராட்டிக் கொண்டேன் 

1 comment:

  1. Very proud of u Amma :)
    Son's separation for his studies made u learn the working of cellphones;
    Daughter's separation for her studies made u learn the working of Skype and internet;
    Finally, the first two along with retirement time has made your neurons work even more faster and write a blog.
    Long way to go. All the best Amma !!!

    ReplyDelete