Tuesday, 29 January 2013

நேற்று ஒரு வார இதழில் வடமாநில த் தொழிலாளர்களின் கூலி மற்றும் இதர வசதிகள் குறித்து கட்டுரை ஒன்றைப் படிக்க நேர்ந்தது.அடிப்படைத் தேவைகளுக்காக தம் இருப்பிடம் மற்றும் உறவுகளை விட்டு இங்கு வந்து உழைக்கின்ற அவர்களின் வாழ்வுப் பொருளா தாரத்தை வேலை வாங்குபவர்களும் வேலைக்கு அழைத்து வருபவர்களும் ஏன் இப்படி நசுக்குகிறார்கள் என்பது மிக்க வேதனையை அளிக்கிறது.இந்த அரசும் இதற்கென ஒரு தனித் துறையை ஏற்படுத்தக் கூடாதா என மனம் ஏங்குகிறது.நானும் என் கணவரும் கடந்த 2011ஆகஸ்டில் ராஞ்சி சென்றோம்.அப்பொழுது எங்கள் ரயில் பெட்டியில் இரு தொழிலாளர்கள் பயணம் செய்தனர்.25வயதிற்குள் தான் இருக்கும்.அதில் ஒருபையன் ஆந்திரா எல்லையில் ஏறப்போகும் ஒருவரின் பெர்த்தில் படுத்து வந்தானோ என்னமோ தெரியவில்லை.2மணி அளவில் t.t.r.ன் சத்தம்.கண் முழித்து என்னவென்று பார்த்தால் அந்த வட மாநிலபையனின் பெட்டிகளை ரயில் பெட்டியின் ஒரு மூலையில் எறிந்து அவனை அந்த T.T.R.அவ்வளவு திட்டு.பாவம் அந்த பையன்.விடிந்ததும் நான் எனக்கு தெரிந்த,அவனுக்குப் புரியும் ஆங்கிலத்தில் ஏன் reserve செய்யாமல் ஏறினாயா எனக் கேட்டேன்.அவன் தன் டிக்கெட் டைக் காண்பித்து reserve செய்திருக்கிறேன் பாருங்கள் என்று காண்பிக்க வந்தான்.அதைப் பார்த்து நான் என்ன செய்ய முடியும் என்பதனால் பேசாமல் இருந்து விட்டேன்.T.T.R.டம் போய் கேட்க துணிவு மற்றும் ஹிந்தி பேச வேண்டுமே?என்ன செய்வது?இது போன்ற அநியாயங்களைக் கண்டு மனம் வருந்த மட்டுமே முடிகிறது.

No comments:

Post a Comment