Wednesday, 30 January 2013

இப்பொழுது இருக்கும் இளம் பருவத்தினருக்கு நடைப் பயிற்சி என்பதே இல்லாமற் போய் விட்டது எனலாம்.எதற்கும் வண்டிதான்.போதாக் குறைக்கு பள்ளிப் பருவத்திலேயே விலையில்லா சைக்கிள் வேறு.நான் பள்ளி,கல்லூரிக்குச் செல்லும் பொழுதெல்லாம் நடைப் பயணம் தான்.ஒரு விதத்தில் நன்மை என்றாலும் கால விரயம் தவிர்க்க இயலாததாகிவிட்டது.ஆனால் வசதிக்கேற்ப இக்காலத்தினருக்கு அலட்சியம்,பயமின்மை வந்துவிட்டிருக்கிறது.தற்பொழுதும் கிராமத்துப் பள்ளிப் பிள்ளைகள் வெகு தூரத் திலி ருந்து நடந்து வருவதைப் பார்க்க முடிகிறது.இந்த முரண்பாடுகள் அவரவர் வீட்டுச் சூழலைப் பொறுத்துத் தான் அமைகிறது.ஏனென்றால் குடும்ப வறுமை,பெற்றோரின் பொறுப்பின்மை இவையும் அறியாமையும் கூட காரணம் எனலாம்.நான் பணியாற்றிய பள்ளி பெரும்பாலும் வறுமை,அறியாமை ஆகிய சூழலில் பயில வரும் பெண்பிள்ளைகள் நிறைந்த பள்ளி.6ஆம் வகுப்பில் படித்தசிறுமியின் பெற்றோர் அவளுக்குப் பிடிக்காத சூழ்நிலை கொண்ட உறவினர் வீட்டில் தங்கவிட்டு வேறு ஊருக்கு தொழில் புரியச் சென்றுவிட்டனர்.அந்தப் பெண் வகுப்பில் இருக்கும் பொழுதெல்லாம் தனக்குப் பேய் பிடித்திருப் பதாக வகுப்பு ஆசிரியையை பயமுறுத்திக் கொண்டே இருந்திருக்கிறாள் அவரும் எங்களிடம் ஆசிரியர் அறையில் வந்து கூறிக் கொண்டிருப்பார்.மேல்நிலை வகுப்புக்கு மட்டுமே செல்லக் கூடிய ஆசிரியர்களாகிய நாங்கள் அவளை அழைத்து எதுவுமே காட்டிக்கொள்ளாமல் இன்று மதியம் என்ன பாடம் உன் ஆசிரியை நடத்து கிறாரோ அதை எங்களிடம் வந்து சொல்கிறாயா என்று அன்புடன் கூறினோம்.அன்றிலிருந்து அவளது மனநிலையும் மாறியது.பிறகு ஒரு முறை அவளின் பெற்றோரை அழைத்து அவரது வகுப்பாசிரியர் அறிவுரை கூறி அனுப்பினார்.இது போன்று உளவியல் ரீதியாக மாணவிகளை அணுகிய அனுபவம் நிறைய உண்டு..

No comments:

Post a Comment