Wednesday 24 April 2013

eliya vaalkkai

              என்       கல்லூரிப் பருவம் மிக எளிமையான ஒன்றாக இருந்திருக்கிறது.பள்ளி வாழ்க்கை முடிந்து புகுமுக வகுப்பில் சென்று அமர்ந்தவுடன் ஆசிரியைகள் செய்து வரும் உடை அழகும்,பேசும் கம்பீரமும் ,நடை வேகமும் ,முக்கியமாக அவர்கள் பேசும் ஆங்கிலமும் என்னை வியக்க வைத்தது.ஓரிரு உடைகளையே மாற்றி உடுத்தும் எங்கள் ஊரின் பழக்கத்துக்கு, எளிமைக்கு இவை வியப்பை ஏற்படுத்தியதில் வியப்பொன்றும் இல்லை.எங்கள் ஊரில் இருந்து எங்கள் இனப்பெண்களில் ,கல்லூரிக்கு செல்லும் முதல் பெண் நான் தானே!எங்கள் தெருவில் இருந்த ஒருவர் ,என்னை அடிக்கடி கேலி செய்து பேசும் வார்த்தை 'என்ன படித்து என்ன ,சட்டி பானை தானே கழுவப் போகிறாய்'என்பதுதான்.{அவருக்கு படிப்பு வாசமே இல்லை என்பதுடன் திக்கித் திக்கித் தான் பேசுவார் என்பது வேறு விஷயம்.}கல்லூரிக்கு வரும் பெரும் பாலானவர்கள் உடை விசயத்தில் எளிமையாகத் தான் வருவர்.அதனால் வேற்றுமை தெரியாது.இப்படி இருக்கும் பொழுது எங்கள் வீட்டிற்கு தயிர் விற்க வரும் ஒரு அம்மா தன் [அவளும் வேறு ஒரு கிராமத்தில் இருந்து வருபவள்.]பெயர்த்தி கல்லூரியில் படிப்பதாககவும்,5 நாட்களுக்கு 5 நிறத்தில் புடவை கேட்பதாகவும் பெருமையுடன் கூறியது எனக்கு வியப்பை தந்ததுடன் பொறாமை யாகவும் இருந்தது.அப்பொழுது கல்லூரியின் DRESSCODE புகுமுக வகுப்பில்,டிகிரி 1ஆம் வருடத்தில் மட்டும் பாவாடை தாவணி.பிறகு கட்டாயமாக புடவை தான்.புது டிரஸ் என்பது மிகக் குறைந்த விலை மற்றும் தரமாகத் தான் இருக்கும்.அந்தப் பழக்கம் தான் என்னை எளிமைப் படுத்தி இருக்கிறது.மேலும் 6,7வகுப்பு படிக்கும் வரை நெசவு வேலைக்கு சென்று [விடுமுறை நாட்களில்]காசு சேர்த்து அடுத்தாண்டு புத்தகம் ,பழைய விலைக்கு வாங்கி விடுவதற்கு அப்பா பழக்கப் படுத்தினார்.அவ்வாறு எளிய வாழ்க்கை வாழ்ந்த தனால் ,இன்றளவும் சிறப்பாக இருக்க முடிகிறது என்று நம்புகிறேன்." இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் '"என்ற வள்ளுவரின் வாக்கு வாழ்க்கைக்கு எவ்வளவு பொருந்து கிறது.

No comments:

Post a Comment