நான் நன்னூல் இலக்கணம் படிக்கும் பொழுது 'முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா'என்று வரும்.விடா என்று அகிறிணைப் பன்மையில் கூறப் பட்டிருக்கும்.மூர்க்கன் ஆகிய மனிதனை அகிறினையில் சேர்த்திருப்பது எவ்வளவு பொருத்தம் என்பதனை என் வாழ்வில் அனுபவ பூர்வமாக உணர்கிறேன்.பிறரின் உணர்வுகள் என்ன,அவர்களுக்கு தோன்றும் சங்கடங்கள் என்ன,அவர்களின் துன்பத்தில் நாம் ஏதும் உதவ முடிகிறதா,உதவ முடியாவிட்டாலும் நெருக்கடி தராத உதவியாவது செய்ய அறிவு வேலை செய்யாத இது போன்றவர்களை உயர் திணையில் சேர்க்காதது எவ்வளவு பொருத்தம்."அறிவினான் ஆகுவதுண்டோ பிறிதின் நோய் தன் நோய் போல் போற்றாக் கடை"என்று வள்ளுவரும் இது போன்றவர்களை,அறிவில்லாதவர் என்று திட்டியும்,பிற உயிர்களின் துன்பத்தை அறிந்து கொள்ளாத அறிவினால் பயனில்லை என்று கடுமையாகக் கூறியிருக்கிறாரே! தான் ,தன் விருப்பம்,தான் நினைக்கும் எண்ணங்கள் மட்டுமே உலகம் என்ற மூர்க்கத் தனம் கொண்டவர் களெல்லாம் அகிறினை அன்றி வேறென்ன?
No comments:
Post a Comment