இன்றைய செய்தித்தாளில் பயிற்சி ஆசிரியர்களிடம் நன்கொடை கட்டாய வசூல் குறித்து படிக்க நேர்ந்தது.ஒரு பிரியம்,நன்றி இவற்றின் காரணமாகத்தான் பயிற்சி ஆசிரியர்கள் ,வழிகாட்டி ஆசிரியர்களுக்கும் ,தலைமை ஆசிரியர்களுக்கும் பொருட்களை தந்து விடை பெறுகின்றனர் .நான் 1982ஆம் வருடம் ஒரு அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் 30நாட்கள் பயிற்சி எடுத்தேன்.முடிந்து என் கணவரின் பணி மாற்றல் காரணமாக சாத்தூர் செல்ல வேண்டி தலைமையாசிரியரிடம் சொல்லிக்கொள்ள சென்ற என்னிடம் ஒரு மூட்டை மிளகாய் கேட்கிறார் .நான் ஒன்றும் சொல்லாமல் வந்துவிட்டேன்.ஆனால் நான் பணி புரிந்த பொழுது என்னிடம் பயிற்சி பெற வந்த ஆசிரியர்கள் நான் விரும்பாமலே ஒருசில பொருட்களை தந்து சென்றனர்.காலப்போக்கில் கடுமையாக மறுக்க வேண்டி வந்தது.பிறிதொரு ஆசிரியைக்கு ஒரு பயிற்சி ஆசிரியர் வெளிநாட்டு கெட்டில் என்று பொருளைக்கொடுத்தார்.அவர் வேண்டா வெறுப்பாக வீட்டிற்கு எடுத்துச்சென்றார்.அது வேலை செய்யவில்லை .மிக்க அவமானத்துடன் மீண்டும் பள்ளிக்கே கொண்டுவந்து கொடுத்தவரை தேடிப்பிடித்து எடுத்துப் போகசசொல்லி கெஞ்சினார் அது பலநாட்கள் பள்ளியில் கிடந்தது.கேட்டுப்பெறுகிற மேல்நிலை பட்டதாரி ஆசிரியர்களும் உண்டு பயிற்சிக்கு வராமலே பணம் கொடுத்து கையொப்பம் பெறுபவர்களும் உண்டு.அநியாயம் .
Aunty... Superb!!!! Chinna Chinna aubavangalai azhagaai korthu arputhama solli irukkeenga aunty...
ReplyDelete- rajee
enakku neengallam ippidi paaratturadu enakku romba makizchiyaa irukku.innam edhavadhu appuram ezuduren.enna.ungavayasukku ille nnalum manasukku aarvama irukku.
Delete