Wednesday, 27 February 2013

samukamum tirumanagalum

எங்கள் வீட்டில் குடி இருப்பவர் வீட்டிற்கு சம்பள ஆள் ஒருவர் வருகிறார். (அவர்கள் கடை வைத்திருப்பவர்கள்)ஒரு காலை நேரத்தில் குடிக்கத் தண்ணீர் கேட்டவர் ஒரு லிட்டர் தண்ணீரையும் குடித்து விட்டார்.என்ன காலையிலேயே வெறும் வயிற்றில் இவ்வளவா என நினைத்து அவரிடம் பேச்சு கொடுத்தேன்.விருப்பத் திருமணம் செய்து கொண்டவர்,பெண் இந்து,இவர் முஸ்லிம்.பெண் குழந்தையும் உண்டு.இரு வீட்டினரின் ஆதரவும் கிடையாது.B.A.HISTORY படித்தவர்,அந்தப் பெண் B.Sc.B.Ed.(இருவருக்கும் என்றைக்கு வேலை கிடைக்கும்?எப்பொழுது இவர்கள் அமைதியான வாழ்க்கையை எதிர் கொள்வது?குழந்தையை யார் பார்த்துக் கொள்வார்கள்?இவருக்கு கிடைக்கும் வருமானம் எப்படி போதும் என்றெல்லாம் நான் நினைத்து என்னுள் வருத்தம் கொண்டேன்.)அந்தப் பெண் குறிப்பிட்ட இனத்தவரா எனக் கேட்டேன்.எப்படி சரியாகக் கேட்டீர்கள் என்று ஆச்சரியப் பட்டார்.பொதுவாக ஆணோ,பெண்ணோ.கலப்புத் திருமணம் என்றால் பெற்றோர் தயங்குவது சமூகத் தவரின் கேள்விகளுக்கும்,பார்வைக்கும் தான்.பிறகு தான் பொருளாதாரம்,இன்ன பிற செய்திகள்.எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி இந்து.முஸ்லிம் ஆடவரை மணந்து,இரு பெண் குழந்தைகள்.ஆனால்,அரசுஉத்யோகம்.பெரிய பெண் 9ஆம் வகுப்பு படிக்கும் பொழுது தான் இருவருள்ளும் கொள்கை வேறுபாடு.கணவர் தங்களின் இனத்தின் படி பெண்ணுக்கு உடனே திருமணம் செய்ய விழைகிறார்.அந்தப் பெண் மணியோ பெண்களைப் படிக்க வைக்க,நல்ல நிலைக்குக் கொண்டு வர விரும்புகிறார்.விளைவு கணவரைப் பிரிந்து,தனி ஆளாக நின்று பெண்களைப் படிக்கவும் வைக் கிறார்.கணவர் குடிமகன் ஆகி விட்டாராம்.அந்தப் பெண்மணி பொருளாதார ரீதியில் கணவரை சார்ந்து இல்லை. பெண்கள் படிப்பில் சிறந்தவர்கள். அவர்கள் பர்தா போடவில்லை.எனினும் சிறிய வீட்டில் அட்ஜஸ்ட் செய்து நம்பிக்கையுடன் வாழ்க்கை நடத்துகிறார்கள்.இந்தப் பெண்களின் திருமண வாழ்க்கை எவ்வாறு அமையும் என்பதும் தெரியாது.எனவே,மதக்கலப்புத் திருமணம் ஏதேனும் ஒரு பின்புல ஆதரவில் நிகழ்தல் நல்லது.அல்லது கணவரின் முழுமை யான புரிதல் அவசியம்.இடையில் கருத்து வேறு பட்டால் பிள்ளை களின் அமைதி எட்டாக் கனி ஆகி விடும்.

No comments:

Post a Comment