Monday, 4 February 2013

நான் சிறு வயதாக இருக்கும் பொழுது மாவு மில்லுக்குப் போவேன்.அப்பொழுதும் யாரேனும் என் வயதொத்த நண்பன் அல்லது நண்பி கூட வருவதுண்டு.கொஞ்சம் தூரத்தில் மில் இருக்கும்.அதனால் ஏதும் வாங்கித்தின்று கொண்டு போவோம்.அது ஜாலி யான ஒரு குட்டி பிக்னிக் போல.அந்த மில்லுக்கு எதிரில் ஒரு பெரிய பங்களா இருக்கும்.அந்தக் காலத்தில் எங்கள் ஊரில் அதுதான் பங்களா.ரொம்பப் பெரிய கட்டிடம்.சுற்றிலும் இடம் விட்டு தற் காலத்தில் உள்ள கலெக்டர் பங்களா போல் இருக்கும்.அது எம்.ஆர்.ராதாவின் பங்களா என்று எங்களுக்கு கூறப் பட்டிருந்தது.நாங்கள் போகும் பொழுதெல்லாம் எம்.ஆர்.ராதா.வருவாரா என்று ஆவலுடன் பார்ப்போம்.ஆனால் ஒருநாள் கூட பார்த்ததில்லை.உயரமாகக் கொண்டை போட்ட ஒரு அம்மாளைத்தான் பார்த்திருக்கிறேன்.அந்தப் பங்களா இன்றும் இருக்கிறது அறிவு தெரிந்ததன் பிறகுதான் எம்.ஆர்.ராதா குறித்தும் ஊருக்கு ஒரு பங்களா என்பது குறித்தும்,இன்ன பிற செய்திகளையும் அறிந்து கொண்டேன்.இப்பொழுது நினைத்தாலும் அறியா வயதின் ஆச்சரியமும் அறிந்த வயதின் சிரிப்பும் வேடிக்கைதான்..

1 comment: