Saturday, 2 February 2013

இன்ஜினியரிங் படித்த பெண்கள் ரொம்ப ராங்கி பிடித்தவர்களாக இருப்பார்களோ என்று  எனக்குத் தோன்றும்.பையன்கள் அப்படி இல்லை.என்னமோ இங்கிலிஷ்ல் பேசிக் கொள்வதும் மற்றவர்களுக்கு ஒன்றுமே தெரியாது என்கிற பாவனையில் நடந்து கொள்ளும் மிடுக்கும் அவர்களிடம் சாதாரணமாகப் பேசலாம் என்ற மனோபாவத்தைத் தகர்த்து விடும்.என் பெண் கூட அவளுக்கு அம்மா என்பதனால் தான் என்னுடன் சேர்ந்து வருகிறாளோ என்று கூட நான் நினைத்துக் கொள்வேன்.ஒருமுறை நான்பணி முடிந்து,என்பெண் கல்லூரி முடிந்து டவுன்பஸ் க்காகக் காத்திருந்தோம்.அப்பொழுது என்கையில் காய்கறி கொண்ட துணிப்பை இருந்தது.நான் துணிப்பை வைத்திருக்கிறேன்.அதனால் உனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லையே?என்று கேட்கும் அளவுக்கு என் மனதில் ஒரு காம்ப்ளக்ஸ்.ஒரு முறை நான் busstand ல் நின்று கொண்டிருந்தேன்.எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வருகின்ற என் பெண்ணின் நண்பி என்னைப் பார்த்தும் தெரியாதவள் போல சென்று விட்டாள்.அதனால் இப்பொழுதும் எந்தப் பெண்ணிடம் பேச வேண்டும் என்றாலும் பார்த்துத்தான் பேசவேண்டி இருக்கிறது.என் குணம் பொதுவாக பிறரின் சுபாவம் அறிந்து பேசுதல்.அப்படி என்பதனால்தான் இப்படி நினைத்துக் கொள்கிறேனோ என்னவோ!

3 comments:

  1. Idhil mukkalvasi ungalin manabramai dhan. etho oru silar apdi nadandhu kolvathai vaithu ottumothamaaga kooruvathu sari alla :)

    ReplyDelete
  2. seri dhan amma.. podhuvana karuthai munvaiungal.. idhanal ungal blog oru vivadha medaiyai maruvadhai thavirkalam.. adhu dhan en virupamum..

    ReplyDelete
    Replies
    1. m..sari.inimel veru seidikalai ezudukiren.

      Delete