எங்கள் ஊரில் மார்கழி 30நாட்களும் பஜனைக் கோஷ்டி தெருக்கள் தோறும்,விடிகாலை 6மணிக்குள் வருவதுண்டு.எங்கள் தெருவிற்கு 6,6.30.க்குள் தினந்தோறும் வந்து விடுவர்.இதில் சிறப்பு என்னவென்றால் ,அவர்களைச்சுற்றி வந்து வணங்க வேண்டும்.எங்கள் அப்பா எனக்கு சொல்லிக் கொடுத்த மற்றுமொரு பழக்கம்.அதுவும் எப்படித் தெரியுமா?4,5ஆம் வகுப்பு சிறுமியாக இருக்கும் பொழுதே பழக்கப் படுத்தப் பட்டது.காலையில் 4மணிக்கே எழுந்து வாசலில் கோலம் போட்டு (தெருவில் யார் பெரிய....கோலம் போடுகிறார்கள் என்பது போட்டியாக இருந்த பருவம்)ஆற்றுக்குப் போய் குளித்து வந்து ,குடம் நிறைய நீர் எடுத்து (தூக்க முடிந்த அளவு)வாசலில் நிற்க வேண்டும்.அப்பொழுது தான் பஜனைக் கோஷ்டியும் நிற்பார்கள்.அவர்களின் காலில் நீர் ஊற்றி 3சுற்று அவர்களை சுற்ற வேண்டும்.பிறகு அவர்கள் தரும் துளசி இலை தான் பிரசாதம்.இவ்வாறு செய்தால் நல்ல கணவன் அமைவார் என்ற ஒரு மூடப் பழக்கம்.பெண் பிள்ளைகள் மட்டுமே இவ்வாறு செய்வதுண்டு.எங்கள் தெருவில் நான் மட்டுமே அவ்வாறு செய்திருப்பேன் என்று நினைவு.(எங்கள் அப்பா கணவரின் அமைவு குறித்த முட்டாள் தனத்தை எல்லாம் சொன்னது இல்லை.எங்கள் வீட்டில் இருந்த பெண்களின் ஆர்வமாகத் தான் இருக்கும்.வேறு எப்படி ஏமாற்றுவது?)இவ்வாறு நான் செய்விக்கப் பட்டதற்கு இன்னுமொரு காரணம்,எங்கள் அப்பாவின் தாயார் வைகுண்ட ஏகாதசி அன்று இறந்து வருடந்தோறும் ,திதி கொடுத்து,அப்பா மட்டும் திட உணவு ஏதும் உண்ணாமல்,விஷ்ணு சகஸ்ர நாமம் சொல்லி இரவு முழுதும் கோவிலில் கண் விழித்து ,மறுநாளில் துவாதசி காலையில் விரதம் முடிப்பதுடன்,பஜனையாளர்கள் 30,35
பேருக்கும் விருந்துணவு எங்கள் வீட்டில் தான் .அன்று மாலை பிள்ளையார் கோவில் பூஜைக் கான மண்டகப்படியும் எங்கள் வீட்டிலிருந்து தான்.எனவே நான் அவ்வாறான பாரம் பரியம் காக்கப் பழக்கப் படுத்தப் பட்டிருக் கலாம்.எங்கள் வீட்டில் நான் மட்டும் தான் இதனை செய்திருக்கிறேன்.என் அக்காவோ,தங்கைகளோ அவ்வாறு செய்விக்கப் படாததன்
காரணம் அவர்களின் வளர்ப்பு அவ்வாறோ என்னவோ?அது போகட்டும்.நான் 10,11வகுப்பு படிக்கும் பொழுது இச் செயல் பாடுகள் என்னால் செய்ய இயலவில்லை.மனமும் சிந்திக்க ஆரம்பித்து விட்டது.சரி,நல்ல கணவர் அமைந்தாரா?எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை;எவருடனும் பழக்கமும் இல்லை.(வளர்ப்பு அப்படி;வீட்டினரும் அப்படி.)ஆனால் என்னை வேலைக்கு அனுப்பியது மட்டுமில்லை.பிள்ளைகளுக்கு நிறைய அன்பு,கல்வி,சுதந்திரம் அனைத்தையும் கொடுத்தார்.இது போதும்.வேறு யாரேனும் என்றால் என்னை வேலைக்கு அனுப்பி இருப்பார் களோ,என்னமோ தெரியாது.என் ஏக்கம் என் பிள்ளைகள் மேற்கூறிய எங்கள் வீட்டின் நிகழ்வுகளைப் பார்க்க முடியவில்லை என்பதுதான்.இவர்கள் பிறக்கும் போது எங்கள் அப்பா உயிருடன் இல்லை.என்ன செய்வது இயற்கையை வெல்வார் யார்?
பேருக்கும் விருந்துணவு எங்கள் வீட்டில் தான் .அன்று மாலை பிள்ளையார் கோவில் பூஜைக் கான மண்டகப்படியும் எங்கள் வீட்டிலிருந்து தான்.எனவே நான் அவ்வாறான பாரம் பரியம் காக்கப் பழக்கப் படுத்தப் பட்டிருக் கலாம்.எங்கள் வீட்டில் நான் மட்டும் தான் இதனை செய்திருக்கிறேன்.என் அக்காவோ,தங்கைகளோ அவ்வாறு செய்விக்கப் படாததன்
காரணம் அவர்களின் வளர்ப்பு அவ்வாறோ என்னவோ?அது போகட்டும்.நான் 10,11வகுப்பு படிக்கும் பொழுது இச் செயல் பாடுகள் என்னால் செய்ய இயலவில்லை.மனமும் சிந்திக்க ஆரம்பித்து விட்டது.சரி,நல்ல கணவர் அமைந்தாரா?எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை;எவருடனும் பழக்கமும் இல்லை.(வளர்ப்பு அப்படி;வீட்டினரும் அப்படி.)ஆனால் என்னை வேலைக்கு அனுப்பியது மட்டுமில்லை.பிள்ளைகளுக்கு நிறைய அன்பு,கல்வி,சுதந்திரம் அனைத்தையும் கொடுத்தார்.இது போதும்.வேறு யாரேனும் என்றால் என்னை வேலைக்கு அனுப்பி இருப்பார் களோ,என்னமோ தெரியாது.என் ஏக்கம் என் பிள்ளைகள் மேற்கூறிய எங்கள் வீட்டின் நிகழ்வுகளைப் பார்க்க முடியவில்லை என்பதுதான்.இவர்கள் பிறக்கும் போது எங்கள் அப்பா உயிருடன் இல்லை.என்ன செய்வது இயற்கையை வெல்வார் யார்?
இந்த உங்கள் அனுபவத்தை நான் இது வரை கேட்டதே இல்லை. Blog உலகிற்கு நன்றி.
ReplyDelete